Tuesday, December 15, 2015

மூத்த பதிவர் நம்பள்கிக்கு என்ன வேணும்?! இதோ!

பதிவர் நம்பள்கி சிம்புவுக்கு சொம்பு தூக்குகிறார். அடிக்கடி சன்னி லியோனுக்கு கூஜா தூக்குவார். யாரு மேலேயும் இவருக்கு கரிசனம் கிடையாது! பதிவெழுதுறேன்னு எதையாவது விதண்டாவாதம் செய்ய வேண்டியது! அவ்வளவுதான்! சரி,  அவருக்கென்றுள்ள கருத்துச் சுதந்திரம். அதை கேக்க எவனுக்கும் உரிமை இல்லை!

இப்போ என்ன சொல்றார்னா சிம்புவின் பாடலுக்கு எதிராக பின்னூட்டமிடுறவங்க, சிம்புவின் பாடலை கடுமையாக விமர்சிப்பவர்களைப் பற்றி  விமர்சிக்கிறார்.

மொதல்ல, இதே ஆளுதான்,  சிம்பு சொன்ன வார்த்தை புண்ணாக்குதான்னு வியாக்யாணம் பேசி ஒரு பதிவு எழுதினார்.

இப்போ ரெண்டு நாளு முன்னால் கொட்டிய குப்பையை மறந்துட்டு..சிம்பு சொன்னது "புண்ணாக்கு" இல்லை, அதிலென்ன தப்பு? என்பதுபோல் சிம்புவிற்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு.

அடுத்தடுத்து முரணாக எழுதும் இவர்  பதிவிலிருந்து  இவர் தரம், மேலும் வேலை வெட்டியில்லாத ஆளு இவரை எல்லாம் கண்டுக்கக்கூடாதுனு இவர் தன்னைப் பற்றித்தெளிவுபடுத்தினாலும். இவரைப் பற்றி வரும் சிந்ந்தனைகள் சில..

இவருக்கு என்ன வயசுனு தெரியலை. பார்த்தால் ஒரு ரிட்டைர்ட் ஆகி, சோஸியல் செக்குரிட்டி வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போயி வந்துகொண்டு இருப்பவர்போல தோனுது . சரி இருந்துட்டுப் போகட்டும்.

இவர் தன் பதிவில் தனக்குத்தானே இட்டுக்கொண்ட பின்னூட்டம் இது.


சிம்புவை எதிர்த்து போராடிய கலாசாரக் காவலர்களே....இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சிம்பு beep செய்த so and so அப்படிப் படங்கள் அதுக்கும் மேலே இருக்கு! சிம்புவிர்ற்கு எதிராக கூவின பதிவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், நாம் போற்றும் பெண்மை வீடியோவில் வேர்வை சிந்த உழைப்பதை எதிர்த்து ஒரு பதிவாவது தமிழ்மணத்தில் போடுவார்களா?


இதிலிருந்து என்ன தெளிவு படுகிறது என்றால்..இவருக்கு எவனோடையாவது சண்டை போடணும் இப்போ! அதாவது இவரு  ஏதாவது குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கொட்டுவாரு. உடனே அவன் அவன் இவரு "டாக்டரு" அமெரிக்காவில வாழ்ந்து கிழி கிழினு கிழிச்சவருனு மதிச்சு, அந்தக் குப்பையை விமர்சிச்சு நம்ம பதிவெழுதணுமாம்! அதான் இவர் எதிர்பார்ப்பு!

சரி எழுதிப்புடுவாம்!!

********************

நம்பள்கி!

நான் கலாச்சாரக் காவலன் எல்லாம் இல்லை. ஆனால் உங்களைவிட தரத்தில் ஒருபடி மேலேனு என்னை நானே நிறுத்திக்கிற ஒரு பொறுக்கிதான். நீங்க அப்போ என்னைவிட மட்டமான ஒரு பொறுக்கினு புரிஞ்சுக்கோங்க!

ஆமா, நான் சிம்பு பாடலுக்கு எதிராத்தான் கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கேன். நான் மட்டும் இல்லை, சிம்பு அம்மாகூட "சிம்பு அப்படி பாடி இருக்க மாட்டான்" னுதான் சொல்லுவாரு. ஆக, உங்களுக்கு எதிரா இங்கே நிக்கிறது சிம்பு அம்மாவும்தான்.

ஆமா, உங்களுக்கு என்ன வேணும் இப்போ?

சாருநிவேதிதானு ஒரு தரங்கெட்ட எழுத்தாளர், இதை விமர்சிக்கிறேன்னு இதைப்பத்தி விளாவரியா எழுதி அவன் அரிப்பை தீர்த்துக்கிறான். இப்போ நீங்க உங்க திறமையைக் காட்டுறீங்களாக்கும்..

நீங்க வாசிக்கிற போர்ன் ஸ்டோரியெல்லாம் இங்கே சிம்புக்கு எதிரா கருத்துச் சொன்ன எல்லாரும் வாசிச்சாங்கனு எதுவும் "டேட்டா" உங்களிடம் இருக்கா?  அதை இங்கே பகிர முடியுமா?

மேலும் பதிவுனு நீங்க எழுதுற குப்பைகளையும் ஒரு பயலுகளும்  வாசிக்கிறது இல்லை! அப்படியே  வாசிச்சாலும், வாசிச்சுட்டுட்டு "இவனுக்கு மரை கழண்டு போயிடுச்சு!" னுதான் சொல்லிட்டுப் போயிடுறாங்க! அதெல்லாம் உங்க காதுக்கு விழாது!

நீங்க பார்த்து ரசிக்கிற "சன்னி லியோன்" வீடியோவும் ஒரு சிலருக்கு குப்பையாக இருக்கலாம். உங்களைப் போலவே  எல்லாரும் சன்னி லியோன் வீடியோ பார்க்கிறாங்கனு எதுவும் உங்களிடம் டேட்டா இருக்கா? அதையும் பகிர முடியுமா?

அப்படிப் பகிர வக்கில்லைனா.. ஊருல  உள்ளவன் எல்லாம் உங்களைப் போல வேலை வெட்டியில்லாமல் முழு நேரம் போர்ன் பார்க்கிறவன்னு நினைப்பதை நிறுத்தும்!

உங்க ரசனை ஒரு மாதிரியாத்தான் இருக்கு. இருந்துட்டுப் போகட்டும். அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை.

அதேபோல் மற்றவர்கள்  ரசனையை நீங்க புரிந்துகொண்டால் போதும். இல்லை நீயும்/உலகமும் நம்பள்கி  மாதிரித்தான், உலகில் உள்ள அனைவரும் நம்பள்கி  போல வேலை வெட்டி இல்லாதவன்தான்.. "சன்னி லியோன் விசிறி"தான் னு   நீங்க அடித்துச் சொன்னால் உங்களுக்கு புத்தி இல்லைனுதான் ஆகும்.

உங்க கருத்துச் சுதந்திரத்தை மற்றவர் மதிப்பதுபோல் நீங்களும் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிங்க.

உங்களுக்கு சிம்பு மேலும், சன்னி லியோன் மேலும் மரியாதை இருக்கா?

அவங்கல்லாம் உங்க "ரோல் மாடலா?" தப்பே இல்லை!

--------------

பின்னூட்டத்தில் பலர், தனிநபர் தாக்குதல் தவறென்று வன்மையாக கண்டனங்கள் (மஸ்தான் ஒலி மற்றும் சக பயணி )தெரிவித்ததால் இப்பகுதி அகற்றப்பட்டது- டிசம்பர் 20, 2015.

---------------------------

அது உங்க தனிப்பட்ட விசயம். அதைக் கேக்க  எனக்கு உரிமை இல்லை. அதை நான் அசிங்கமாக விமர்சிக்கப் போவதும் இல்லை.

அதே சமயத்தில் சிம்புக்கு எதிரா பின்னூட்டமிட்டவனையெல்லாம் விமர்சிச்சா அப்புறம் நானும் இப்படித்தான் விமர்சிப்பேன்.

அப்புறம் உங்களை எதுக்கு தமிழ்மணத்தில் இன்னும் வச்சிருக்காங்கனு தெரியலை.  ஒரே குப்பையா, எடுத்த வாந்தியையே இன்னும் திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டு இருக்கீங்க. உங்களைத் தமிழ்மணத்திலிருந்து தூக்கினால் நல்லதுனு தோனுது!  அதுக்கு ஏதாவது வழி செய்யணும்!

நீங்க மாஞ்சி மாஞ்சி எதிர்பார்த்த பதிவை எழுதியாச்சு. இப்போ திருப்தியா?!

Monday, December 14, 2015

டி ராஜேந்தர்! நல்ல அப்பன்டா இந்தாளு!

சிறுவயதில் என்னுடைய மாமா பசங்களோட விளையாடும்போது அடிக்கடி ஏதாவது சண்டை வரும். எனக்குத்தான் கை நீளும். மாமா மகன் போயி அம்மாட்ட பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு "வருண் அடிச்சுட்டான்!" னு  சொல்லிட்டுப் போயிடுவான்.

வீட்டுக்குப் போனால் எங்கம்மா எனக்குப் "பொறந்த நாள்" கொண்டாடுவாங்க!

தெருவில் உள்ள பசங்களோட ஏதாவது பிரச்சினைனாலும் என் மேல் தப்பே இல்லைனாலும் அம்மா எனக்குத்தான் "பொறந்த நாள்" கொண்டாடுவாங்க! எவனாவது என்னைப் பத்தி போட்டுக் கொடுத்தால், எனக்குத்தான் செம அடி விழும்!

அடிக்கிறது வலிக்கிதோ இல்லையோ அழுகை வரும். எல்லாம் கொஞச நேரம்தான். மறுபடியும் விளையாட ஓடிவிடுவேன். அடுத்த பொறந்தாள் கொண்டாட்டத்துக்கு ரெடி ஆகனுமில்லை?

ஆக வருடத்தில் ஒரு 10 நாளாவது எனக்கு பொறந்த நாள் கொண்டாடப்படும்!
எவன் தப்பு செய்தாலும், "அவன் என் பிள்ளை இல்லை, நீதான் ஒழுங்கா நடந்துக்கணும். நீ எதுக்கு அங்கே போற?" இதுதான் அம்மா சொல்வது எனக்கு.

இப்போ சிம்பு பிரச்சினைக்கு வருவோம். தரக்குறைவான பாடல் ஒன்றை இவனும், பொடியன் அநிருத்தும் (இவன் ரஜினியோட மச்சினன் பையனாம்ப்பா!) வெளியிட்டு, தங்கள் தரத்தை பாதாளத்தில் தள்ளிக் கொண்டார்கள்!

அப்பன், ராஜேந்தர் என்ன செய்யணும்?

தறுதலை மகனை, ஊரறிய கண்டிக்கணும்! இப்படி ஒரு மட்டமான பாட்டை அவன் பாடியதற்காக வெட்கப்படுகிறேன்னு சொல்லி எல்லாரிடமும் மன்னிப்புக் கேக்கணும்! அப்படி செய்தால் அவன் உண்மையான ஒரு பொறுப்புள்ள தந்தையார்!

மகன் என்ன பண்ணினாலும் சரி, ஊருப்பய பண்ணியதுதான் தப்புனு சொல்லிக்கிட்டு அலையிறானே? என்ன ஒரு கேவலமான அப்பன் இவன்?!

சிம்புவைச் சொல்லி குற்றமில்லை! அவனோட அப்பன் இப்படி வளத்துவிட்டு இருக்கான்! தப்பை தப்புனு சொன்னால்தானே, சிம்பு திருந்த வழியிருக்கு? என் மகன் எப்போவுமே யோக்கியன்னு சொல்லி வளர்த்தால் பிள்ளை இப்படிதான் ஊருப்பயளுகள்ட்ட அடிபட்டு சாவும்!

Thursday, December 10, 2015

குழப்பத்தில் ஒலகநாயகர் ர சி கா மணிகள்!

வெள்ளம் கரை புரண்டு ஓடி மக்கள் எல்லாம் உயிரை இழந்து உடமையை இழந்து நிற்கும்போது நிதானம் தேவை. மற்ற அரசியல்வாதிகள் வெள்ளத்தை வைத்து ஆட்சியை இறக்க முயல்வதும், ஆளுங்கட்சி வெள்ள உதவி வழங்கி தம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயல்வதையும் தவிர்க்க முடியாது. ஏன் னா அவர்கள் தொழில் அரசியல்!

நம்ம உலகநாயகனுக்கும் ஆளும் ராணிக்கும் விஸ்வரூபம் தொடர்ந்து பிரச்சினைகள். தூங்காவனம் பாக்ஸ் ஆபிஸ் பாதிப்புகூட அதோட வெளிவந்த வேதாளம் ஆளுங்கட்சி சினேகிதர்களால் வெளியிட்டப்பட்டதே என்கிற தியரியை நம்புகிற நிலையில் இருக்கிறார் ஒலகநாயகர்.

இப்போ வெள்ளம். அதனால் பாதிப்புனு வரும்போது, பெருந்தலைகள் என்ன செய்யணும்? பண, பொருள் உதவி செய்யணும்!  இல்லைனா சும்மா இருக்கணும். இந்த சமயத்தில் நான் நெறையா வரிகட்டுறேன், அரசாங்கம்தான் ஏழைகளை காப்பாத்தணும். "சிஸ்ட்மே கொல்லாப்ஸ்" ஆயி இருக்குனு சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அது  தவறாகப் பார்க்கப்படும். ஆளுங்கட்சியால்  மட்டுமல்ல! பாதிக்கப் பட்ட பொதுமக்களாலும்தான் இது தவறாகப் பார்க்கப்படும்.

ஆனால் உலக நாயகர் உதவி எதுவும் செய்யமுடியலையேனு குற்ற உணர்வுடன் வெட்கப்பட்டதோட நின்னு இருக்கலாம். இந்த ஒரு சூழலில் ஆளுங்கட்சியை விமர்சித்தல் மற்றும் நான் வரி கட்டுறேன், நல்ல குடிமகன் என்று சொல்வதெல்லாம் (அப்படி சொல்லியிருந்ந்தால்) அது புத்திசாலித் தனம் அல்ல!

இன்னைக்கு உள்ள சோஷியல் மீடியாவில் சொன்னதையும் உண்மை மாரி கொஞ்சம் சேர்த்துவிட்டு எழுதுவான்! சொல்லாததையும் சொன்னதாக எழுதுவான்!

உலகநாயகன் ஏதோ "அப்படி" மேற்கூறியபடி சொன்னதாக செய்தி வெளிவர. உடனே அவருக்கு முழுநேரமும் (என்ன எழவைச் சொன்னாலும் சரி சரினு ,)  கால்வருடும் அவர் விசிறிகளும்... ஆஹா ஓஹோ, ஒலக நாயகர் வீரத்தை காட்டிப்புட்டாரு, உண்மையைச் சொல்லிப்புட்டாரு னு மார்தட்ட..

உடனே அமைச்சர் பன்னீர் செல்வம் இவருக்கு எதிரா, இவர் சொன்னதாக சொல்லப்பட்டதுக்கு எதிராக  ஒரு பெரிய ஸ்டேட்மெண்ட் விட..

உடனே அரசியல் ஆதாயம் தேட டாக்குட்டரு ராமதாஸ் கமலுக்கு கைகொடுக்க வர..

கமலஹாசன் நான் அப்படி எதுவும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவில்லை னு மறுத்துச் சொல்ல!

 எல்லாம் நாசமாப்போச்சு!

கமல் என்ன சொன்னாலும் சரி சரினு கால் அமுக்கிவிடுப்வன்  நிலைமை அதோகதியாயிடுச்சு!!

ஒரு பக்கம் கமலஹாசன் குழப்புறார்னா.. இம்முறை குழம்பியது அவர் சொல்வதெல்லாம் புரிந்தமாரி நடிக்கும் "ரசிகாமணிகள்"தான்!

பி ஆர் வோ நிகில் முருகனுக்கு வேலை போய்விட்டதா ஒரு வதந்தி உலவுது!

இந்தப் பாழாப்போன வெள்ளம்தான் எல்லாத்துக்கும் காரணம்!

இந்நிலையிலும் புன்னகைக்கிறார் நம் பகவான்! இந்தாளுக்கு நேரங்காலம் தெரியாது! கொஞ்சம் சோகமாக இருக்கலாமே? கூறுகெட்ட மனுஷன்! :(

Saturday, December 5, 2015

வெள்ளத்தில் மூழ்கி செத்தவர்கள் மேல் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுங்கப்பா!

நம்ம ஊரு அரசியல்வாதிகள் எத்தனை கீழ்த்தரமான ஆட்கள் என்பதற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட் பசியில் வாடும் மக்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களில் எல்லாம் "அம்மா ஸ்டிக்கர்" ஒட்டிவிடப்படுகிறதாம்.


 



 200 பேருக்கு மேலே செத்துப்போயிட்டாங்களாம்ப்பா, அவனுக பிணத்தின் மேலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுங்கப்பா!

உங்க அப்பன் வீட்டு சொத்தை கொடுக்கிறதுக்கு க்ரிடிட் எடுக்கிற நீங்க உங்க கவனக்குறைவால் பலிகொடுத்ததுக்கும். அதனால் பிணமானதுக்கும்  க்ரிடிட் எடுத்துக்க மாட்டேன்னா எப்படி?

 என்ன ஒரு கேவலமான பார்ப்பன அரசியல் இது!

அம்மா ஸ்டிக்கர் ஒட்டுறவன் எல்லாம்  யாரு? திராவிட கைக்கூலிகள்தான்!! வேற யாரு?


Friday, December 4, 2015

மழை நிற்க வேண்டி வருண பகவானுக்கு பாலாபிஷேகம்!

என்னடா ஒரே வெள்ளக்காடா இருக்கு! பக்தர்கள் எல்லாம் பகவானிடம் எதுவும் போயி வேண்டாமல் இருக்காளே?னு யோசிச்சுண்டு இருந்தேன்..எதிர்பார்த்த செய்தி நக்கீரனில் வந்துடுச்சு.! வருண பகவானுக்கு பூஜை, பாலாபிஷேகம்! பகவானுக்கு இதை எல்லாம் செய்து அவரைக் குளிரவைத்து மழையை நிறுத்தச் சொல்லி வேண்டிக்கொண்டார்கள் பெரியவா னு!  ஆனால் ஒண்ணு அட் லீஸ்ட் இவர்கள் நேர்மையைப் பாராட்டணும். பாலையும் தயிரையும் வீணாக்கினாலும்..இது எல்லாம் நம்ம  "பாவி பகவான்" னோட செயல்தான்னு ஒத்துக்கிட்டாளே !!! அந்தப் பெரிய மனசைப் பாராட்டணுங்காணும்!!


மழை நிற்க வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் 

மழை நிற்க வேண்டி தஞ்சாவூர் பெரியகோவிலில் வருண பகாவனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. இது குறித்து நம்மிடம்  பேசிய குருமூர்த்தி சுவாமிகள், “ பெருவுடையார், பெரியநாயகி உடனுறையான பெரியகோவிலில்தான் இந்தியாவிலேயே வருண பகவான்  தனி சன்னதியில் மேற்கு புறத்தில் வீற்றிருக்கிறார். வேறு எங்கும் இதுபோல் தனி சன்னதியில் வருண பகவான் இருப்பது இல்லை. 

சென்னையில் பெய்யும் தொடர் மழை நிற்க வேண்டியும், மக்களை துன்பங்களில் இருந்து காக்கவும், அவர்கள் குடும்பத்தினருடன் நலமாக வாழவும், சிறப்பு பூஜைகள் நடத்தினோம்.  1500 ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் மழை வேண்டியும்,  மழை நிற்பதற்கும் பாடபெற்ற திருபதிகம் செய்யப்பட்ட பாடலை ஓதுவார் மூர்த்திகள் கொண்டு வருண பகவான் சன்னதியில் பாடப்பெற்றது. எண்ணெய், பால், மஞ்சள், திரவியம், தயிர், சந்தனம் இன்னும் பல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது’’என்றார்.

     - இரா.பகத்சிங்


பக்தர்களில் ஒரு  சிலர் இந்த நேரத்தில் பகவானை ஓரமா  ஒரு பக்கம் உக்கார வச்சுட்டு "இயற்கை" யின் சீற்றம்ணு சொல்வார்கள்.  "நம்ம வில்லன் பகவானை" விட்டுப்புட்டு  "இயற்கை" யை வில்லனாக்கி ஒரு பாவமும் அறியாத பகவானை காப்பாத்திடுவா!. ஆனால் பரிணாம வளர்ச்சியில்  இல்லை, சத்தியமா உன்னையும் என்னையும் பகவாந்தான் படைச்சாரானு சொல்லுவா.. இங்கே மட்டும் "இயற்கை", நம்ம பகவானை காப்பாத்தப்  பயன்படுத்தும் "பலி கடா" . அவ்வளவுதான்!

எது எப்படியோ பாலையும் தயிரையும் பகவானுக்கு ஊத்தி அவரைக் குளிப்பாட்டி "சரிக் கட்டினால்" வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பசியில் வாடி அலையும் ஏழைகள் வயிறு ஆறும் என்கிற நம்பிக்கை  என்னவோ அபூர்வமானதுதான்.

----------------

ஆமா, வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவாளுக்கு நீ என்ன பண்ணின வருண்? நான் ஒரு மண்ணாங்கட்டியும் பண்ணலை! ஆனால் பகவானுக்கு பெரிய அளவில் இன்னொரு பாலாபிஷேகம் செய்து பகவானைக் குளிர வைக்கலாம்னு ஒரு ப்ளான் இருக்கு. ஆனால் ஒண்ணு பகவானுக்கு நான் இந்த முறை ஏற்பாடு செய்வது  எருமைப் பாலாபிஷேகம்தான்!  அப்போத்தான் பகவானுக்குப் புத்தி வந்து அடுத்த முறை மழையே வராமல் பூமி வறண்டு பஞ்சம் வருவதற்கு உதவுவார், பகவான்!

பக்தர்களுக்கு நான் சொல்வது ஒண்ணே ஒண்ணுதான்!  

எல்லாம் பகவான் செயல்! அவன் என்ன செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்!

Wednesday, November 25, 2015

என்னுடைய 10 ஆசைகள்! அப்புறம் புத்தர் பற்றி

எனக்கு புத்தர் ரொம்பப் பிடித்தவர். என் சொந்தபந்தம், என் க்ளோஸ் ரிலேடிவ்ஸ் எல்லாருமே புத்தரை தன் மனைவியை விட்டுவிட்டு ஓடிப்போயிட்டாரு. இவர் எப்படி உயர்ந்தவர்? என்று விமர்சிப்பார்கள். புத்தரும் தன் மனைவி, தன் குழந்தைகள்தான் முக்கியம்னு வாழ்ந்திருந்தால் அவரை நமக்குத் தெரியாமலே போயிருக்கும். ஆசையைத் துறக்கணும்னு பெண்டாட்டி, பிள்ளைகளை கட்டிக்கொண்டு சொன்னால் எப்படியிருக்கும்? அதுபோல் எத்தனை  கோடி சாதாரண மக்கள் வாழ்ந்து செத்து இருக்காங்க? அவர்களை எல்லாம் நமக்கு ஏன் தெரியாமல் போய்விட்டதுனு யோசிக்கணும். மேலும் நம் ஈழத் தமிழ் மக்களுக்கு சிங்களவர்கள் எல்லாம் புத்தமதத் தழுவலில் உள்ளதால் அவர்களுக்கும் புத்தர்னா பிடிக்காது. பலவிதமாக புத்தரை அவமானப் படுத்தியதைப் பார்க்கலாம். புத்தர் எப்படி வாழ்ந்தாரோ? அவர் அருகில் இருந்து வாழ்ந்தவர்கள் அவரைக் குறை சொல்லக் கூட வாய்ப்புண்டு. ஆனால் எனக்கு புத்தரின் சிந்தனைகள் மிகவும் உயர்வாகவே தோன்கிறது. ஆசை என்பது முடிவில்லாத ஒன்று. அது சாகிறவரை இருக்கும். வாழும்போதே அதைத் துறந்தால் அது மிகப்பெரிய சாதனையே என்பது என் உறுதியான எண்ணம்.

வருண்! ஆசைகளைச் சொல்லுடானு சொன்னால் "நிராசை"யை வளர்க்கணும் என்பதுதான் என் ஆசைனு சொல்லிக்கிட்டு இருக்க?

ஆரம்பத்திலேயே ஆசையைப் பத்திப் பேச தகுதியற்றவன் நான் னு விளங்குதா, மைதிலி?

* ஒன்று..பொதுவாக ஒரு சிலர்  தனக்கு எவ்வளவு தெரிந்தாலும் தன்னையும் மற்றவர்களுக்கு இணையாக  மதிப்பிட்டுக்கொண்டு மற்றவர்களுக்கும் நெறையா தெரியலாம் என்ற எண்ணம் கொண்டவர்களும் உண்டு. இவர்களிடம் உறவாடும்போது என்னுடைய "அகந்தை"  அல்லது "ஈகோ" ரொம்பவே சிறிதாகிவிடும். " உங்களுக்குத் தெரிந்துகூட எனக்குத் தெரியாது" "நான் உங்களைவிட ஏழைதாங்க", "உங்களவுக்குக் கூட என் சிந்தனைகள் உயர்வானதல்லங்க", "யோசிச்சுப் பார்த்தால் உங்களைவிட நான் பலமடங்கு அயோக்கியன், " என்பதுபோல் பொய்போல இருக்கும் உண்மைலகளைச் சொல்லி இறங்கிப்போகும் பண்புள்ளவந்தான் நான். அதே சமயத்தில்   ஒரு சில பேர் இருக்கார்கள், தன் தகுதியை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணிக்கொண்டு எப்போவுமே  ஒரு படி மேலேயிருந்து பேசுறது. அப்படி தன்னை ஒருபடி உயர்த்தி வைத்துக்கொண்டு பேசும் ஒரு சிலரிடம் (அவர் எத்தனை பெரிய ஆளாக, வயதில் முதிர்ந்தவராக, மேதையாவே இருந்தாலும் ) என் "ஈகோ" மிகப் பெரிதாக விஸ்வரூபம் எடுப்பதை நானே கவனிக்கிறேன். நியாயப்படிப் பார்த்தால் எல்லோரிடமும் ஒரேமாதிரித்தான் நான் நடந்து கொள்ள வேண்டும். ஏன் எல்லோரிடமும் ஏன் ஒரே மாதிரி நடக்கமுடியவில்லை? என்று யோசிப்பதுண்டு. எல்லோரிடமும் (அவர்கள் தன்னைப் பற்றி உயர்வாக நினைத்தாலும், தாழ்வாக நினைத்தாலும்) நான் ஒரேவாறு நடந்து கொள்வதுதானே நியாயம்? அப்படி நாம் நடந்துகொள்ள முயல் வேண்டும் என்றொரு நிறைவேறாத ஆசை உண்டு எனக்கு. அடேங்கப்பா! முதல் ஆசையேச் சொல்லவே  இந்த இழுவை இழுக்குது

* ரெண்டு.... மனிதந்தான் செயற்கை அறிவியலை கண்டு பிடித்து  இவ்வுலகை நாசமாக்கி விட்டான். நதிகளை, நாசமாக்கி, காற்றை நாசமாக்கி, உலகை நாளுக்கு நாள் நாசமாக்கி வருகின்றான்.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!

மனிதன் "எவால்வ்" ஆகவில்லையென்றால் இவ்வுலகம் எப்படி இருக்கும்? மொதல்ல கடவுளே இருக்க மாட்டார்! :)

சைனா இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் பெரிய நதிகள் பல வேதிப்பொருள்கள் கலக்காமல் சுத்தமாக இருக்கும். உயிரினங்கள்  சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்கும். விலங்குகள், பறவைகள் எல்லாம் நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இருக்கும். இவ்வுலகம் உருப்படணும்னா மனித இனம் கூண்டோட ஒழியணும்! மனித இனம் விரைவில அழியணும்னு எனக்கு ஒரு ஆசை. மனிதன் செத்துட்டா கடவுளும் செத்துத்தானே ஆகணும்? புரியுதா? கடவுளைக் கொல்ல வருண் சதி செய்றான் னு புரியுதா? :)

* மூனு ..யோசிச்சுப் பார்த்தால் ஒரு நாடுனு எடுத்துக்கொண்டால் அவர்கள் மக்கள்னு வந்துவிட்டால் மக்களுக்கு  நல்லது செய்யணும்னு நினைக்கிறாங்க. ஆனால் இரண்டு நாடுகளுக்குள் ஒரு சண்டைனு வரும்போது, இவ்வளவு நல்ல எண்ணம் கொண்ட நாடு, தன் சுயநலத்திற்காக இன்னொரு நாட்டுடன் சேர்ந்துகொள்கிறது. கவனித்துப் பார்த்தால் சில நாடுகள் ந்நடந்துகொள்வதுபோல் சிறு பிள்ளைகள்கூட நடந்து கொள்வதில்லை! இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல! இந்தியா எப்படினு ஈழத் தமிழர்களிடம் கேளுங்க! நீங்களே பீத்திக்காதீங்க! அமெரிக்கா எப்படினு மிடில் ஈஸ்ட்ல இல்லை ரஷ்யாக் காரன் இல்லைனா சைனாக் காரன் இல்லைனா நார்த் கொரியனிடம் கேளுங்க! வாழ்க்கை, தத்துவம் எல்லாம் தனிமனிதனுக்குத்தான்! நாடுகளுக்குக் கெடையாது என்றுதான் தோனுது. நாடுகளும் நல்லொரு தனிமனிதன் போல பிறநாடுகளிடம் நடந்து கொள்ளணும்னு ஆசை.

* நாலு..பார்ப்பனர்களுக்குத்தான் எத்தனை பிரச்சினை.? பாவம் பக்கத்தில் ஆடு திங்கிறவன், மாடு திங்கிறவன், பன்னி திங்கிறவன்னு கண்டவனையும் இவர்கள் கட்டி அழ வேண்டியிருக்கு. இவர்களுக்காக ஒரு தனி நாடு உருவாக்கி இவர்களை எல்லாம் அந்த சொர்க்க பூமிக்கு கூட்டமா அனுப்பணும்னு எனக்கு ஒரு ஆசை. நம்மள மாதிரி பாவிகளுடம் இவர்கள் எதுக்கு இருந்து இன்னல் பட்டுக்கிட்டு இருக்கணுமா?னு  ஒரு நல்லெண்ணம்தான். தப்பா நெனச்சுப்புடாதேள்! என்ன அப்படி ஒரு நாடு அவர்களுக்கென்று வந்துவிட்டால், டாய்லெட் அள்ளுறது, போருக்குப் போவது, ரோடு போடுவது, வீடு கட்டுவது எல்லாமே பார்ப்பனர்களும் செய்யணும். ஊருப்பயலை எல்லாம் செய்ய வைத்துவிட்டு பகவானை வழிபட்டுக்கொண்டு நான் உயர்ந்தவன்னு சொல்லி பொழைப்பை ஓட்ட முடியாது அந்த சொர்க்க பூமியில். இல்லையா?

* ஐந்து.. என்ன காரணம்னு தெரியவில்லை. எனக்கு எப்போவுமே நேரம் பத்துவதில்லை. வேற மாதிரிச் சொன்னால் காலம்/நேரம் மிகவும் வேகமாக ஓடுகிறது. ஒரு சிலர் சொல்றாங்க.. அப்படியென்றால் நீ சந்தோஷமாக இருக்கிறாய் என்று அர்த்தம் என்று.  அதுவும் அமெரிக்கா வந்ததிலிருந்து நேரம் படு வேகமாக ஓடுது. அதனாலென்ன?னு கேக்குறீங்களா? 10 வருடம் கடப்பது ஒரு வருடம் கடந்ததுபோல் இருக்கு. அதனாலென்ன? அப்போ நான் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் 10 ஆண்டுகள்தான் வாழ்ந்தது போல் ஒரு உணர்வு இருக்கும் இல்லையா? அத்தனை கொஞ்ச வயதில் சாக ஆசையில்லை! நேரம் மெதுவாகக் கடக்கணும்னு ஆசை!

* ஆறு .. எங்க வீட்டுக்குப் பின்புறம் புறாக்கள் வந்து விருந்து சாப்பிட்டுவிட்டுப் போகும். ஒவ்வொரு சமயம் திடீர்ணு "டமார்ணு" ஒரு சத்தம் கேக்கும். என்னனு பார்த்தால் புறா  எல்லாமே ஒட்டுமொத்தமாகப் பறந்து போகும். என்ன காரணம்னு பார்த்தால்  மேலே ஒரு பெரிய பருந்து (ஹாக்) வீட்டைச் சுற்றி வட்டமிட்டு உயரப் பறந்து கொண்டு இருக்கும். அதன் "அட்டாக்"தான் காரணம். நம்ம ஊரில் கோழிக்குஞ்சை பருந்து தூக்கிப் போவதைப் பார்த்து இருப்பீங்க இல்லை? அதேபோல் அது தேடும் இரை என்னனா இந்த அப்பாவிப் புறாக்கள்தான். அதுக்கப்புறம் ஒரு சில நாட்கள் இதுக்கு பயந்து கொண்டு  புறாக்கள் திரும்பியே வராது. ஹாக் பயம்தான் காரணம். வேடிக்கை என்னனா கடவுள்தான் இதுபோல் ஒரு பறவை இன்னொரு பறவையை அடிச்சு சாப்பிடுவதுபோல் படைத்தான்னு சொல்றாங்க. அவனைத்தான் தினமும் வணங்கி வழிபடுகிறாங்க பக்தசிகாமணிகள். இந்தப் பருந்துகளும் புறாக்களுடன் சேர்ந்து ஏதாவது தானிங்களை சாப்பிடணும்னு ஆசை. உண்ஐயைச் சொல்லுங்க! இதுநாள் வரை, புறாக்கள் எல்லாம் நாத்திகர்கள் என்கிற உண்மை தெரியாது இல்லை உங்களுக்கு? :)

* ஏழு..மெட்ரோ ட்ரைன்ல ஏறி ஈஸ்ட் போகணும்னு நிக்கும்போது ஈஸ்ட் பவுண்ட் ட்ரெய்ன் வந்தால் சந்தோஷமாக இருக்கும். போய் வேலைகளை முடித்துவிட்டு திரும்பி கிளம்பிய இடத்துக்கு வரும்போது வெஸ்ட் பவுண்ட் ட்ரெயினுக்காக நிக்கும்போது,  ஈஸ்ட் பவுண்ட் ட்ரெய்ன் வரும். அப்போது அது யாரோ எனக்கு அந்நியம் போலவும், வேண்டாத ஒரு ட்ரையின் போலத் தோணும். இந்த ட்ரைன்தான் சிலமணி நேரங்கள் முன்னால் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது. அதுக்குள்ள அது அன்னியமாகத் தோனுது . என்ன ஒரு சுயநலம்னு தோனும். எந்த ட்ரயின் வந்தாலும் அதற்காக காத்து நிக்கும் பயணிகள் சந்தோஷப்படத்தானே செய்றாங்க. அதனால் எந்த ட்ரெயின் வந்தாலும் ஒரே மாதிரி சந்தோஷம் வரணும்னு ஆசை.

*எட்டு.. பெரிய பெரிய தோல்விகள், இழப்புகள், துன்பங்கள் வரும்போது மனிதன் சிந்தனைகள் எல்லாம் உயர்வானதாகிவிடுகிறது. இதுதான்  வாழக்கை என்பான். இவ்வளவுதான் வாழ்க்கை என்பான். பெரிய பெரிய  தத்துவம் பேசுவான். பெரிய குணமெல்லாம் அவனிடம் இருந்து வெளியே வரும். அதே மனிதன் வெற்றி மேல் வெற்றி பெற்று அகந்தையில் இருக்கும்போது பொதுவாக அவனிடம் அகந்தையுடன் கலந்த தாழ்ந்த சிந்தனைகளில் உருவான எண்ணங்கள்தான்  அதே மனிதனிடம் இருந்து வெளி வருது. என்னிடம் உள்ள ஒரு வீக்னெஸ் என்னனா. இப்போ கேர்ரம் ஆடுறேன்னு வச்சுக்கோங்க. என் எதிரில் ஆடுபவர் தோல்வியடைவதுபோல் வந்துவிட்டால், எனக்கு என் வெற்றியை நினைத்து சந்தோஷப்படுவதைவிட அவர் தோக்கிறாரேனு கஷ்டமாக இருக்கும். பொதுவாக நம் நண்பர்கள் அல்லது உறவினர்களுடந்தானே ஆடுவோம்?  என் வெற்றியை நினைத்து சந்தோஷப்பட முடியாத ரெண்டுகெட்டான் நிலை வராமல் இருப்பதுபோல் என் மனநிலை இருக்கணும்னு ஆசை.

* ஒன்பது..நான் பார்த்தவரைக்கும், ஒரு சில அயோக்கியர்களும் பொய், பித்தலாட்டம் எல்லாம் செய்து மாட்டிக்கொள்ளாமல் மிகப் பெரிய வெற்றியடையிறாங்க. அறிவியல் துறையிலும்தான். நல்லவங்க மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள் பொதுவாகத்  தோல்வியைத் தழுவுறாங்க.  Life is not fair most of the time! Life எல்லா நேரங்களிலும் fair ஆக இருந்தால் நல்லாயிருக்குமேனு ஒரு ஆசை.

* பத்து..ஒரு சிலரிடம் ஒத்துப் போகாதுனு உணர்ந்த பிறகும், உடனடியாக என்னால் ஒதுங்க முடிவதில்லை. என்னை சமாதானப் படுத்தி ஒதுங்கிச் செல்லக் கொஞ்ச நாட்கள் ஆகிறது,  நாகரீகமாக சுமூகமாக ஒதுங்கிச்செல்ல! இருந்தபோதிலும் Once I go away from them, I never look back again for sure! அதுபோல் ஒத்து வராது னு உணர்ந்தவுடனேயே ஒதுங்கிப்போக முடியணும்னு ஒரு ஆசை.

அடேங்கப்பா என் "தீசிஸ்" எழுத நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை!! ஒரு வழியா என்னத்தையோ எழுதி முடிச்சாச்சு..

தொடரச் சொல்லி வேற யாரையும் மாட்டிவிட இஷ்டமில்லை! :)

பின் குறிப்பு: இது என்னுடைய அனுபவத்தில் இருந்து வந்த எண்ணங்கள்/ஆசைகள். தயவு  செய்து  "என்னைத்தான் சொல்றான்" என்கிற குறுகிய வட்டத்தில் இருந்து பார்க்காதீங்க. உலகம் உங்களை என்னைவிட மிகப் பெரியது! :)






Thursday, October 22, 2015

உங்களுக்கு பதிவுலகம் போர் அடிக்கிறதா?

ரொம்ப நாள் சென்று உஷா அன்பரசு ஒரு பதிவு எழுதி இருந்தாங்க. "என்னங்க உயிரோடதான் இருக்கீங்களா?'னு கேட்டால் ஒரு உண்மையைச் சொன்னாங்க. எனக்குத் தெரியப் பலர் இவர்களைப் போல் உண்மையைச் சொல்வதில்லை! அதாவது வலையுலகில் பதிவெழுத ஆர்வம் குறைந்துவிட்டது என்று சொன்னாங்க. ரொம்ப நாள் பதிவுலகை வேடிக்கை பார்க்கும் நான் இதேபோல் பலர் ஆர்வக் குறைவினால் பதிவெழுதுவதை நிறுத்தி விட்டதைப் பார்க்கிறேன்.

இதற்கு காரணம் என்ன? நாம் இப்படி செய்வது தமிழ்ப் பதிவு உலகிற்கு நாம் செய்யும் தீங்கா? எல்லாரும் இப்படியே ஒதுங்கிவிட்டால் தமிழ்ப் பதிவுலகம் செத்து விடாதா? என்றெல்லாம் நான் யோசிப்பதுண்டு. யோசிச்சு என்ன செய்ய? நடக்கிறதுதான் நடக்கும். ஆனால் பதிவுலகில் ஏகப்பட்ட மாற்றங்கள்.

முன்னாளில் எல்லாம் எதிர் பதிவு, தொடர் பதிவு, பழிக்குப் பழிப் ப்பதிவுனு ஒரே அடிதடி வெட்டுக்குத்தா இருக்கும். இப்போ எல்லாம் தமிழாவலர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள்னு பதிவெழுதுறவங்க தரம் உயர்ந்து காணப்படுகிறது. இன்றையப் பதிவர்களின் படைப்புகள் உயர் தரமாக இருக்கிறதுனு என்னால் அடித்துச் சொல்ல முடியாவிட்டாலும்,  இன்றைய சூழலில் தரமான பதிவர்கள் பலர்  (விதி விலக்கு உண்டு) ஆர்வமாகப் பதிவெழுதுறாங்கனு சொல்லுவேன்.

பதிவுகளின் எண்ணிக்கை, அடி தடிப் பதிவுகள், தன்னை அடையாளம் காட்டாமல் என்னைப்போல் பதிவர்கள்  போன்றவை குறைந்தாலும், பதிவுலகத் தரம் என்னமோ உயர்ந்துதானுள்ளது. ஆனால் பதிவுலகில் எதிர்காலம் சிறக்கணும்னா சிறுவர்கள், சிறுமிகள், முக்கியமாக பக்குவமடையாதவர்கள்  ஆர்வத்துடன் பதிவெழுதணும். இளங்கன்றுகள்தான் பயமறியாது உண்மையைச் சொல்லுவார்கள். அதுபோல் பக்குவமற்ற, ஆவலுடன் பதிவெழுதும் பதிவர்களின் பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது. இது நிச்சயம் எதிர் காலப் ப்பதிவுலகை பாதிக்கும் என்பதென்னவோ  கசப்பான உண்மை.

ஆமாம், எனக்கும்தான் பதிவுலகம் போர் அடிச்சிருச்சு. அதை ஒரு பதிவெழுதி அகற்றலாம்னுதான் இப்படி ஒரு பதிவு! பதிவெழுதிட்டு ஓடிடலாம்னு இல்லை? :)

அப்போ என்னதான் "இண்டெரெஸ்டிங்" ஆ இருக்கு? எப்படி பொழுது போக்கிற? னு நீங்க கேக்க நினைக்கிறது தெரிகிறது. நாளுக்கு நாள் அறிவியல் வளருகிறது. இன்றைய அறிவியல் புத்தகங்களில் ஏகப்பட்ட விசயங்கள் அழகாக விளக்கப் பட்டு உள்ளது. நாம் படிக்கும்போது நுனிப்புல் மேய்ந்தவற்றையெல்லாம் இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இங்கே வெட்டிச் சண்டை வருவதில்லை. 100 பின்னூட்டங்கள் எழுதி யாரையும் மாற்ற முடியாமல் போக வேண்டிய ஒரு அவல சூழல் இல்லை. நேற்று வரை சரியாகப் புரியாத ஒன்று இன்று தெளிவாகிய ஒரு நல்ல உணர்வு வருகிறது. இதுபோல் ஒரு உணர்வு எனக்கு பதிவுலகில் வருவதில்லை! தேவையில்லாமல் வாதாடி நம் கருத்தோட நாம் போவதுபோல்தான் பெரும்பாலும் வரும் உணர்வு. கவனம்! நான் என்னைப் பற்றிதான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு வேறு மாதிரி அனுபவமாக இருக்கலாம்! அதனால்தான் நீங்கள் இன்னும் ஆர்வமாகப் பதிவெழுதுறீங்க!

Misunderstanding, misjudgment, misinterpretation etc etc is all I get out of spending my time in the tamil blog world. That's my reason for losing my interest here. Moreover, I don't think I ever made any constructive contribution in Tamil blog world. Wait!  This is my own assessment about myself. So, it wont be a great loss if people like me leave from here.They can only make this place better by being absent rather.  That's my justification! :) Trust me, I am being extremely honest here! Don't cry please. I am around! Not dead yet! Take it easy folks!


Monday, October 19, 2015

பாண்டவர் அணி வெற்றி! பதிவுலக மேதை ஒருவர்..

தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் பதவி எல்லாம் ஒரு முறைதான்னு கொண்டு வந்தால் என்ன?னு தெரியலை. நான் பார்த்தவரைக்கும் அமரிக்காவில் ஒரு மாநிலத் தமிழ் சங்கப் பதவியிலிருப்பவர்கள்கூட.. இருக்கிறவரைக்கும் "ஏன்டா இந்தப் பதவிக்கு வந்தோம்னு தெரியலை?. ஏகப்பட்ட வேலையாயிருக்கு?" னு புலம்புவார்கள்.ஆனால்  ரெண்டு வருடம் சென்று பதிவியிலிருந்து இறங்கும் (இறக்கப்படும்)போது ஒரே "டிப்ரெஷன்"தான் இவர்களுக்கு. பதவி என்பது எப்படியெல்லாம் ஒருவரை ஆட்டிப் படைக்கிது னு இவர்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

சரத்குமாரும், ராதா ரவியும் எத்தனைகாலம் இருந்தாலும் இறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சு ஒருவழியா இறக்கப் பட்டுவிட்டார்கள். ஆனால் ஒண்ணு பதவிக்கு வந்திருக்கிற நாசர் அணி ஒண்ணும் பெருசா சாதிக்கப் போவதில்லை என்றுதான் தோனுது. ஏதாவது உருப்படியா செய்யணும்னா அன்னையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடணும் (ஆள்ற வரைக்கும்)! அப்படி எதுவும் செய்யத் தவறினால் ஒண்ணும் கிழிக்க முடியாது! எங்கே என் கூற்றை தவறாக்கிறாங்களானு பார்க்கலாம்.

 நம்ம கமலஹாசன் அவர்கள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பங்குகொள்ளும் ஒரு குழுவை, இந்திய திரைப்பட கழகம்னு மாத்தணும்னு சொல்றாரு. அதாவது சென்னையில் உள்ள இந்த குழுவை மட்டும் அப்படி மாத்தணுமா? இல்லை வட இந்தியா, மற்ற மாநிலங்களில் உள்ள எல்லாக் குழுவையும் ஒரே குழுவாக மாற்றணும்னு சொல்றாரா?னு எனக்கு விளங்கவில்லை!

ஆமா,  "உலக நாயகன்" ஏன் இந்தியாவோட நிறுத்திக்கிட்டாரு? னு தெரியலை, உலகத் திரைப்பட கலைஞர்கள்னு மாத்த வேண்டியதாக சொல்லியிருக்கலாம்.

ஏன் கமல் இப்படி ஒரு டிஸ்க்ரிமினேஷன்? உங்க பார்வை குறுகிய வட்டத்திலேயே நிக்கிதுனு தெரியலை.

"நாம் தமிழர்" சீமானுக்கு இது பிடிக்கவில்லை போலும்! தமிழ் தமிழர்னு பொங்கி எழுகிறார்..

--------------------

உங்களுக்கு எப்படினு தெரியலை, எனக்கு ஒரு சில பதிவர்களை சுத்தமாக ஆகாது. எனக்கு ஆகாதுனா உடனே அவர்கள் கெட்டவர்கள்னு நெனச்சுப் புடாதீங்க. ஒருவேளை நான் "வில்லன்" னாவும், பிடிக்காத பதிவர்கள் "கீரோ"வாகக் கூட இருக்கலாம். 

அப்படிப்பட்ட ஒரு "கீரோ" ரொம்ப நாள் சென்று ஒரு பதிவெழுதினார். பதிவு, நடிகர் சங்கம் தேர்தல் பற்றியது. இந்தப் பதிவின் இடையில் ஏதோ வருண் பற்றி விமர்சனம். எனக்கும் இவருக்கும் எப்போவுமே சுத்தமாக ஆகாது. ஏன்? அவரு ஏனோ என்னை அவர்  "நண்பன்"னு நெனச்சுக்குவாரா என்னனு தெரியலை. என்னைப் பொருத்தவரையில் நான் அவர் நண்பனா இருக்க எப்போவுமே எனக்குத் தகுதி கெடையாது. இவர் எப்படினா எப்போவுமே தன்னை ஒரு படி மேலே வைத்துக்கொண்டு, மேதாவிபோலதான் பேசுவார்- பதிவா இருக்கட்டும் பின்னூட்டமா இருக்கட்டும் எல்லாவற்றிலும் இதே இழவுதான். அந்த "ஆட்டிட்டூட்" எனக்கு நண்பர்களிடம் சுத்தமாகப் பிடிக்காது.

இன்னும் புரியலையா?

இவர் சமீபத்திய பதிவில் "சங்கிலி முருகன்" னு "பூச்சி முருகனை" மனதில் கொண்டு தவறாக எழுதிவிட்டார். சரியா? இது ஒரு சாதாரணத் தவறுதான். எல்லாரும் செய்றதுதான். இதை வாசிச்ச ஒரு பின்னூட்டதாரர், அதை பின்னூட்டத்தில் சரி செய்யச் சொல்லி  சொல்ல முயல்கிறார்.

உடனே இவர்  என்ன செய்யணும்? "சாரிங்க, தப்பா எழுதிட்டேன். திருத்திடுறேன். நன்றி"னு சொல்லணும். ஒண்ணு தவறை சரி செய்யணும். இல்லைனா  நான் சொன்னது சரினு விளக்கம் கொடுக்கணும்.

என்னதான் சொன்னாரு?னா..  

எனக்கு ரொம்ப டச் விட்டுடுச்சு, அதனால் தவறா எழுதிட்டேன் போல. சரி செய்ய வந்த நீங்களாவது அதை சரியாச் சரிசெய்யாமல் அதில் தவறு செய்து இருக்கீங்களே?!!  னு சரி செய்ய வந்தவன் செய்ததுதான் தவறு. நான் செய்தால் அது தவறில்லை! எனக்கு டச் விட்டுப் போயிடுச்சுனு ஒரு கேவலமான சமாளிப்பு.

பதிவில் இவரு சொன்னது (சங்கிலி முருகன்)..
அரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிறது எனலாம்.சங்கிலி முருகன் யாரென்றும், அவர் வழக்கு தொடர்ந்து காலம் தொட்டு சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகியும்,குமரிமுத்து,எஸ்.வி.சேகர் போன்றவர்களை வெளியேற்றிய கால கட்டங்களில் புகைய துவங்கி இன்று கோபக்கனல்கள்,எதிர் மறுப்பு என பொது வெளிக்கு வந்து விட்டதால் கருத்துரிமை பங்காளியாகிறேன்.


பின்னூட்டத்தில் சரி செய்ய வந்தவர் பாவம்..
ராஜேஷ், திருச்சி said... Sangili Murugan???????? yepaaa adhu "poochi" Murugan.. October 12, 2015 at 10:15 AM

தப்பை சரி செய்யாமல் ஒரு சமாளிப்பு! (இன்னும் அந்தப் பதிவில் சங்கிலி முருகன் னுதான் இருக்கு)

ராஜ நடராஜன் said... திருச்சி ராஜேஸ்/நாந்தான் டச் விட்டுப்போய் தப்பா சொல்றேன்னா நீங்களாவது சொல்றதை ஒழுங்கா சொல்லக்கூடாதா:)
சங்கிலி முருகன்






Poochi Murugan lodges complaint on Radharavi
பூச்சி முருகன்

எனக்குத் தெரிய சங்கிலி முருகனுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் சம்மந்தமே இல்லை. அதை பின்னூட்டத்தில் சரி செய்யச் சொன்னதுக்கு எதுக்கு விதண்டாவாதம்? ஏன் இப்படி இருக்காங்கனு தெரியலை!

இந்தியர்கள் மனநிலை ஏன் இப்படி இருக்கு? "சாரி, தவறுதலா எழுதிட்டேன்..சரி செய்துவிடுகிறேன்" னு சொல்றது ஏன் அவ்வளவு பெரிய கஷ்டம்??.

இன்னும் அப்படியே அதை விட்டுவிட்டு புரியாதமாதிரி நடிக்கிறது. நீங்க அதைச் சொன்னீங்களா நான் இதை நெனச்சேன்னு எதையாவது சொல்றது..ஆனால்;

போடுறதெல்லாம் பெரிய மனுஷன் வேடம். உண்மையில் இருப்பது வெறும் வரட்டு கவுரவம்!

ஆமா, மேன்மை தாங்கிய பதிவுலகக் கண்மணிகள் நீங்க என்ன சொல்ல வர்ரீங்க?

ஆமா, உங்களுக்கு இது எல்லாம் ஒரு சாதாரண விசயம்தான். எனக்கு அப்படி இல்லை! அதனால் உங்க அறிவுரையை இங்கே பின்னூட்டத்தில் வைக்க வேணாம்! புரிதலுக்கு நன்றி!

*****************

Wednesday, October 7, 2015

இணையதளம் என்கிற தரமற்ற இடம்! போத்தீஸ், புலி!

போன வாரம் க ம ல ஹா ச ன் நடிச்ச போத்தீஸ் விளம்பரம் வெளிவந்தது. இதுபோல் ஒரு கமர்ஷியல் வரப்போவதாக முன்பே சொல்லீட்டாங்க என்பதால் விளம்பரம் ஒண்ணும் ஆச்சரியமாக இல்லை.

இதற்கிடையில் பல தளங்களில்  க ம ல ஹா ச ன் அவர்களின் அபிமானிகள், மற்றும் அவர் "பக்தர்கள்" இதில் வரப்போகிற வருமானத்தில் ஒரு பகுதியை எய்ட்ஸ் (உயிர்க்கொல்லி ?) நோயாளிகளுக்கு வழங்கப் போவதாக பேசிக்கொண்டார்கள். உடல் தானம் செய்தவர் இவர் என்பதால் இவருடைய பொதுநோக்குப் பார்வை, மற்றும் மக்கள் நல சேவைகள் என்றுமே சிறப்பாகவே இருக்கும்.

இவ்விளம்பரத்திற்காக க ம ல ஹா ச ன் எவ்வளவு பணம் வாங்கினார் என்பதும் யாருக்கும் தெரியாது.

இதெல்லாம் வெளியே சொல்லணுமா என்ன? ஆனால் எவனோ ஒரு மட்டமான ஆள்,   பொய்ச்சான்றிதழ் ஒண்ணை  உருவாக்கி, இந்த கமர்ஷியலுக்கு "க ம ல ஹா ச ன் 16 கோடி வாங்கியதாகவும், அந்தத் தொகையை அப்படியே "பெற்றால்தான் பிள்ளையா?" என்கிற ஒரு பொதுநல இயக்கத்துக்கு அளித்துவிட்டதாகவும் இணையதளம் எல்லாம் பரப்பிவிட்டுவிட்டான்!

 அந்தச் ச்செய்தி உண்மை இல்லைனு அந்த ஆர்கனைஷேசன் அறிவித்துவிட்டது! (கீழே பார்க்கவும்)


 Some of you have read tweet regarding a donation by Mr.Kamal Haasan to the Petralthan Pillaiya Trust ( PTP Trust). This is false. Spreading this info gives false hope to our children. Please share and retweet this msg. Please avoid spreading inaccurate information. - Msg from Mr.Rajeev Nambiar (Founder Trustee) #kamalhaasan #ptptrust

இந்தப் பொய் செய்தியை இணையதளத்தில் வெளியிட்டவன்  க ம ல ஹா ச ன் ரசிகரோ இல்லை க ம ல ஹா ச னை அவமானப் படுத்தணும்னு கிளம்பிய வேறொரு நடிகனின் ரசிகனோ தெரியவில்லை. என்ன ஒரு அநியாயம் இது?

சைபர் க்ரைம் போலீஸ் இவர்களை எல்லாம் ஏன் சும்மா விட்டு வைக்கிறதுனு தெரியலை. பிடிச்சு உள்ள போடுறதை விட்டுட்டு..


--------------------------------

 நம்ம விஜயண்ணாவுடைய புலிப் படம் வெளி வரும்போது, அரசியல்வாதி  யாரு வேலைனு தெரியலை, முந்திய நாள் வீட்டில் ஐ டி ரெய்ட்! படம் ரிலீஸ் ஆக தாமதமாகி பெரிய பிரச்சினை ஆயிடுச்சு. இது போதாதுனு சிறுவர்களுக்குனு சொல்லப் படும் இப்படத்திற்கு, யூ சான்றிதழ் வழங்கப்பட்டாலும், கவர்ச்சியாக, வல்கராக இருக்குனு சொல்லி தமிழ்நாடு அரசு வரிச்சலுகை தருவதை மறுத்துவிட்டது.
ஏன்னு தெரியலை நம்ம  விஜயண்ணா எங்கேயோ பார்த்துக்கிட்டு நிக்கிறாரு!

இதையும் புலினுதான் சொல்றாங்க- கூகுல் பண்ணிப் பாருங்க


படத்துக்கு ரிவியூ எல்லாம் ஒட்டு மொத்தமாக நல்லா வரவில்லை என்பது இன்னொரு சோகம்.  முக்கியமாக விஜய் ரசிகர்களை இப்படம் திருப்திப் படுத்த முடியவில்லை. அரைப்பரிச்சை லீவில் வெளிவந்ததால் குழந்தைகளையும், பெண்களையும் திருப்திப் படுத்தியதாக தோன்றுகிறது.

ஆனால் பட பட்ஜெட் 118 கோடினு சொல்றாங்க. அது உண்மை என்றால் போட்ட காசை எடுப்பதே கஷ்டம் என்கிற நிலையில் இந்தப் ப்புலி இருக்கிறது. நம்ம ர ஜி னி இந்தப்படம் பாத்துட்டு நல்லாயிருக்குனு ஒரு "கமர்ஷியல்" கொடுத்ததும்  இப்படத்தின் தோல்வியைக் கொண்டாட காத்துக்கிட்டு இருக்க அஜீத் விசிறிகளெல்லாம் கடுப்பாகிட்டாங்க போல.  ட்விட்டரில் ஆளாளுக்கு ரசினியைத் திட்டி தீக்குறாணுக!

தமிழர்களின் தரம் மட்டமானதுனு இப்போ ட்விட்டர்கள் மூலம் உலகம் தெரிந்து கொள்கிறது.

விஜயண்ணாவை, ஆயுதங்கள் (துப்பாக்கி, கத்தி) காப்பாத்திய அளவுக்கு, மிருகங்களும் பறவைகளும் (சுறா, குருவி, இப்போ புலி) காப்பாத்தவில்லைனு சொல்லி இனிமேல் விலங்குகள் பறவைகளிடமிருந்து "அண்ணாவை" தள்ளி இருக்கச் சொல்லி எல்லாரும் கேட்டுக்கிறாங்களாம்!

இதிலே கொடுமை என்னனா, ஐ டி ரெய்டின் விளைவால்  யு எஸ்ல படம் சரியான நேரத்தில் வெளி வரவில்லை என்பதால் எல்லாருக்கும்  "free pass" கொடுக்க வேண்டிய கட்டாயம் . யு எஸ் பட விநியோகஸ்தர்களுக்கு "இந்தப் புலியால்" பெரு நஷ்டம்!

Thursday, September 24, 2015

சண்டியர்கரன் என்னும் பைத்தியக்காரப்பய!

இந்தப் பதிவை ஒண்ணும் விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பைத்தியக்காரப்பயலோட ட்விட்டர் சிலவற்றை வாசிச்சாலே போதும். ஒரு ந டி க னை மதிப்பதும், இன்னொரு ந டி க னை வெறுப்பதிலும் தவறில்லை! ஆனால், டிவிட்டர் போன்ற தளங்களில்  இவன் உளறும் உளறல்கள் இவனுக்கு நேரம் சரியில்லை என்று தெளிவுபடுத்துகிறது.


Sep 20
குஷ்பு இட்லிக்கு தான் மதுரை பேமஸ் என்று நினைத்திருப்பான் குமுற குமுற அடிப்பதுக்கும் தான் என்று இன்னைக்கு புரிஞ்சிருப்பான்

  1. கோச்சா நஷ்டத்துக்கு லுங்கா... லுங்கா நஷ்டத்துக்கு குபாலி... இது தான் குஜினியின் மார்க்கெட்!!!
  2. உலகத்திலேயே நஷ்ட ஈடு கேட்டு முதன் முறையாக உண்ணாவிரதம் இருந்தது குஜினி படத்தை வெளியிட்டவர்களும் திரையிட்டவர்களும் தான்...
  3. ஆமை குமாருக்கு கூட ஹிட் படம் கொடுத்தவரை... பலூன் குமாராக்கி வீட்டு அனுப்பியவர் குஜினி!!!
  4. குஜினியே தயவு செஞ்சு உன் ரசிகர்களுக்கு ஆமையை வச்சாவது பிரியாணி செஞ்சு போடு.... சி.கா கிட்டே போயி சில்லரை கேட்குது....அவனுக்கு கூஜா தூக்கி

    பெத்து விட்டுருக்காங்க பாருங்க! இந்தப் பைத்தியக்காரப்பயலுக்கு ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் அப்புறம் ஒரு ப்ளாகர் அக்கவுண்ட். இவனோட நலவிரும்பிகள் எல்லாம் இவனைப் பார்த்துக்கோங்கப்பா! காலம் கெட்டுக் கெடக்கு,  எவனாவது போட்டுத் தள்ளப்போறான்!

    சண்டியர் அண்ணா! உங்களுக்கு அப்பனையெல்லாம் பார்த்தாச்சு. கவனமா இருங்க! ஒரு நேரம்போல ஒரு நேரம் இருக்காது!

Tuesday, September 22, 2015

முகமூடிப் பதிவர்களை ஒரேயடியா ஒதுக்கிடலாமே?

பதிவுலகில் ஒரு சிலர் தங்கள் கருத்தைப் பரிமாறிகொள்வதுடன் சரி, தன் முகவரி, தன் புகைப்படம், தன் தொழில், தன் சாதி, தன் மதம் போன்றவற்றை சொல்லாமலே காலத்தைக் கடத்துகின்றனர். இது தனிப்பட்ட ஒருவருடைய விருப்பம். அதை மதிக்கத் தெரியாத இன்றைய பதிவுலக ஜாம்பவான்கள் சிலர், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் முகமூடிப் பதிவர்கள்.  இது வெளிக்கு!  மனதுக்குள் நினைப்பது "இவனுக எல்லாம் எதுக்கு பதிவுலகில் பதிவெழுதுகிறானுக, முதுகெலும்பில்லாதவனுக" என்பது.

இங்கிதம் தெரிந்த ஒரு சிலர், இது அவர்களின் சொந்தப் பிரச்சினை, இதை கூகுலே அனுமதிக்கிறது. இது சட்டவிரோதமானதல்ல! என்றெல்லாம் பல முறை எடுத்துச் சொன்னாலும் ஒரு சிலர் இதை விடுவதே இல்லை. மறுபடியும் மறுபடியும், ஏன் இப்படி இருக்காங்க?னு மூனு மாத்திற்கு ஒரு முறை இவர்களை மிகுந்த "அக்கறை"யுடன் விமர்சிக்காமல் விடுவதில்லை!  இந்த முகமூடிப் பதிவர்கள் இவர்கள் மனநிலையை ரொம்பதான் பாதிக்க வச்சுட்டாங்கப்பா.

உங்களுக்கு என்ன பிரச்சினை? பதிவர் கூட்டமா? முகம் காட்ட விருப்பப்பட்டவங்க ஒண்ணா சேருங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுங்க. தமிழை இன்னும் மேலே கொண்டு போங்க! உங்கள் தமிழ்ப் பணியை எல்லாரும் மெச்சி விருது  கொடுக்கட்டும். அது ஏன் சும்மா முகம் காட்ட விரும்பாதவர்களும்  எல்லாரும் அவங்க முகத்தை காட்டியே ஆகணும்னு திரும்பத் திரும்ப அடம் பிடிக்கிறீங்கனு விளங்கவில்லை!

முக்காடு போட்டு இருக்கும் ஒரு இஸ்லாமியப் பெண்ணை, "முகத்தைக் காட்டினால் என்ன?" என்பீர்களா? ஏன் அப்படி செய்வதில்லை? அது அவருடைய விருப்பம். அவரை முகம் காட்டச் சொல்லி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை! என்பதை உணர்ந்துதானே?

இந்த உலகில் பலதரப்பட்ட மனிதர்கள் பிறந்து வாழத்தான் செய்றாங்க. அவங்க எல்லாம் தமிழ் தெரிஞ்சவங்களா இருந்தால் அவங்க எல்லாம் உங்க உறவு என்று யாரும் சொல்லிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எதுவும் அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை!

முகம் தெரிந்த பதிவர்கள்தான் உங்களுக்குப் பிடிக்குமா? அவங்க மேலேதான் உங்களுக்கு மரியாதையா? அவர்களோட மட்டும் உறவாடுங்க. உங்களுக்குப் பிடிக்காத முகமூடிப் பதிவர்கள் பதிவுகளை புறக்கணியுங்கள்! முகமூடி அணிந்தவர் உங்க தளத்தில் கருத்துச் சொல்ல வந்தால் உங்க தரத்துக்கு அவர்கள் தரம் குறைந்த தென்றால், அவர்கள் பின்னூட்டங்களை ஒரு போதும் வெளியிடாதீங்க! அவர்களை அறவே புறக்கணியுங்கள்! இதெல்லாம் உங்க உரிமைகள்!

அதை விட்டுப்புட்டு எதுக்கெடுத்தாலும் முகமூடிப் பதிவர்கள் ஏன் தங்கள் அழகு முகத்தை காட்ட மாட்டேன்றாங்க? அவங்க பொறந்த ஊர் என்ன? என்ன சாதி? என்ன மதம்? அவர்களுக்கு  என்ன சம்பளம்? என்கிற கவலையெல்லாம் உங்களுக்கு எதற்கு?

"கார்பன்"க்கு வாலென்ஸி என்ன? ஏன் ரெண்டு இல்லை? நாலு?

டையமண்ட் ஏன் கடினமானதாக இருக்கிறது?

தங்கம் மட்டும் ஏன் மஞ்சளாக மிளிருகிறது?

வைரஸுக்கு உயிரில்லையாமே? நெஜம்மாவா?

என்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்த வெர்ச்சுவல் உலகில் முகம் காட்டாத, முகம் தெரியாத, தமிழ் தெரியாத  ஒருவர் வந்து வலையுலகில் சரியான பதில் சொல்வதில்லையா? அந்த பதில் உங்களுக்கு உபயோகம் ஆவதில்லையா? முகம் தெரிந்தவர்  "தவறுதலான" பதிலாக சொன்னாலும் அந்த பதிலைத்தான் நான் எடுத்துக்குவேன்னு அடம் பிடிப்பீர்களா?

நீங்க நல்லா வாழுங்கள்- உங்கள் இஷ்டப்படி!

மற்றவர்களை வாழவிடுங்கள்- அவர்கள் விருப்பப்படி!


Wednesday, September 16, 2015

கபாலியும் தூங்காவனமும்- ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தூங்காவனம் டரைலர் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்புதுனா கபாலியின் ஸ்டில் இன்னொரு பக்கம் ரிலீஸ் ஆகியிருக்கு!

அறுபது வயதுக்கு மேலேதான்  இவங்க ரெண்டுபேரும் இன்னும் புத்துணர்ச்சியுடன் நடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இதில் இன்னும் விசேஷம் என்னனா இருவரும் இளம் இயக்குனர்களை இயக்க வைத்து நடிக்கிறார்கள்.







கபாலி

தூங்காவனம்




ரெண்டு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆச்சுனா எப்படி இருக்கும்? நீங்க ஆசைப்பட்டாலும் அதெல்லாம் மலையேறிப்போன காலம் இது!




கபாலி

Tuesday, September 15, 2015

ஒரு காலத்தில் இவ்ளோ மோசமா நான் கதை எழுதி இருக்கேனா!!

சில வருடங்கள் முன்னால போயி (இந்த தள ஆர்கைவ் லதான்) நான் எழுதிய ஒரு கதையின் ஒரு எபிசோடை  எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். 

என்ன ஆச்சர்யம்!! நானா இப்படியெல்லாம் கதை எழுதினேன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்குப்பா!

 அப்படி என்னத்தை எழுதிப்புட்டீங்கப்பூ? னு கேட்பீங்களே!

நான் ஒரு மாதிரியா உங்களை "warn" பண்ணிட்டேன்.. இனிமேல் தொடர்ந்தால் உங்க  துணிச்சலை நான் பாராட்டுறேன்.  

மற்றபடி விளைவுகளுக்கு  நான் பொறுப்பில்லை!  உங்க பாடு, அன்றைய வருண் பாடு!

--------------------------

 

ரொம்ப செக்ஸியா இருக்கு! கடலை கார்னர் 62

"இந்த போர்டை தூக்கி வர இவ்ளோ நேரமா, கண்ணன்?"

"கொஞ்சம் கவனமா தூக்கி வந்தேன். ஏதாவது டேபிள் இருக்கா இதை அதுமேலே வச்சு விளையாட?"

"இந்த டீ டேபில் சரியா வருமா?"

"தட் வில் பி பெர்ஃபெக்ட்!"

"சரி கேர்ரம் போர்டை வச்சுட்டு வந்து காஃபியக் குடிங்க, கண்ணன்."

"நெஜம்மாவே உனக்கு விளையாடத் தெரியுமா?"

"நெஜம்மாத்தான். இதோட பத்துத்தர கேட்டுட்டுட்டீங்க, இதே கேள்வியை!!காஃபி நல்லாயிருக்கா?"

"யு டேஸ்ட் பெட்டெர் தான் யுவர் காஃபி!"

"அப்படியா? நான் எல்லா இடத்திலும் ஒரே டேஸ்டா? இல்லைனா வேற வேறயா?"

"அதெப்படி ஒரே டேஸ்டா இருப்ப?"

"காஃபி நல்லாயில்லையா?"

"ரொம்ப நல்லாயிருக்குடா!சரி வெளையாடுவோமா? எந்த ஸ்ட்ரைக்கர் வேணும் உனக்கு? ப்ளாஸ்டிக்கா? இல்லைனா ஐவெரி ஸ்ட்ரைக்கரா? பிக் ஒன்!"

"ப்ளாஸ்டிக்லதான் நான் வெளையாண்டு இருக்கேன். இதென்ன இத்தனை ஹெவியா இருக்கு?'

"இது ஐவெரி ஸ்ட்ரைக்கர்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே ஐவெரியானு தெரியலை."

"ஆமா, ரெண்டு பேரு வெளையாட ஒரு ஸ்ட்ரைக்கர் போதாதா?"

"டோர்னமெண்ட்ல எல்லாம், யு வில் ஜுஸ்ட் ப்ளே வித் யுவர் ஸ்ட்ரைக்கர். அவன் அவன் ஸ்டரைக்கரை அடுத்தவனை தொடக்கூட விடமாட்டானுக!"

"என்ன டோர்னமெண்ட் அது இதுனு சொல்றீங்க? நீங்க என்ன பெரிய சேம்பியனா?"

"நான் இல்லைடா. ஒரு சிலர் ஆடும்போது பார்த்து இருக்கேன். நான் இந்த ஐவெரி ஸ்ட்ரைக்கர்ல நான் வெளையாடுறேன்."

"சரி, அடுக்குங்க! இதெதுக்கு இவ்ளோ பவ்டெர் போடுறீங்க?"

"அப்போத்தான் ஃப்ரிக்ஷன் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்."

"சரி அடுத்து எப்போ பெட் ரூம், கண்ணன்? ரொம்ப நாளாச்சு தெரியுமா?"

"ஏன் மறந்தா போயிடப்போது?"

"ஹா ஹா ஹா. நீங்க மறந்தாலும் அதிசயப்பட ஒண்னுமில்லை!"

"எப்போப் பார்த்தாலும் இதானா?"

"எப்போப் பார்த்தாலுமா? ஆமா ஒரு நாளைக்கு அஞ்சுதர என்னை சொர்க்கத்து அழச்சுண்டு போறீங்களாக்கும்? எவ்ளோ நாளாச்சு!!"

"யு ஜஸ்ட் ஹாட் யுவர் பீரியேட்ஸ்?"

"சோ வாட்?"

"வாட்!!!"

"ஹா ஹா ஹா!"

"சரி, கேரம் வெளையாடலாமா?!"

"சரி, ரூல்ஸ் என்னனு சொல்லுங்க?"

"ரெண்டு விதமா ஆடலாம். ஒண்ணு நம்ம பக்கத்தில் உள்ள ஆர்ரோல உள்ளதெல்லாம் டைரெக்ட் டச் பண்ணக்கூடாது. பக்கத்தில் உள்ள பாக்கட்ல உள்ளதை ரிவேர்ஸ்ல வெளையாடி "சிங்க்" பண்ணனும்"

"அதானே யுஸுவல் ரூல்ஸ்?"

"இப்போ எல்லாம் ரூல்ஸ் மாத்தீட்டாங்கடா. ஆர்ரோ ல உள்ளதையும் எல்லாம் அடிக்கலாம். அப்புறம் உன் பக்கத்தில் உள்ள "பாக்கட்"லயும் காயினை உன் தம்ப் வச்சு இப்படி, இங்கே பாரு, இப்படி ஆடி "சிங்க்" பண்ணலாம்!"

"தம்ப் லயா? அதெல்லாம் கெடையாது. பழைய ரூல்ஸ்தான் எனக்குத் தெரியும்!"

"இல்லைடா! இப்போ எல்லாம் தம்ப்ஸ்னு வேற மாதிரி ஆடுவாங்க!'

"அதெல்லாம் எனக்குத் தெரியாது! உங்க பக்கத்தில் உள்ள ஆர்ரோவிலே உள்ளதை டைரெக்ட்டா அடிக்கக்கூடாது! ஆர் யு "ச்சீட்டிங்" மி, கண்ணன்?"

"ஏமாத்தலாம் இல்லடா! போய் ஆண்லைன்ல லேட்டெஸ்ட் ரூல்ஸ் படிச்சுப்பாரு!"

"எனக்கு தம்ப் ல ஆடத்தெரியாது!'

"சரி, ஓல்ட் ஃபேஷன்ட் கேம் ஆடுவோம்!"

"நான் ஸ்டார்ட் பண்ணவா?"

"யாரு மைனஸ் போடுறாங்களோ அவங்கதான் ஆரம்பிக்கனும்."

----

----

"யு மிஸ்ட் இட்..இந்தாங்க "மைனெஸ்" போட்டாச்சு!"

"யு ஹாவ் குட் கண்ட்ரோல்டா! சரி, ஆடு!"

"நீங்களே ஆரம்பிங்க!"

"சரி! எனக்கு வைட் தான் பிடிக்கும்"

---

---

"என்ன இது கண்ணன்!! முதல் அடியிலேயே நாலு வைட் காணோம்?"

"அதான் இந்த ஐவெர்ரி ஸ்ட்ரைக்கர் ஸ்பெஷாலிட்டி! சரி. ஆடு!"

"இருங்க. கொஞ்சம் யோசிக்க வேணாமா?"

"இதென்ன செஸ்ஸா யோசிக்க?"

"ஸ்ஸ்ஸ்! கொஞ்சம் சும்மா இருங்க, கண்ணன்!"

"உதட்டை அப்ப்டிக் குவிக்காதே!"

"ஏன்?"

"ரொம்ப செக்ஸியா இருக்கு. என்னால கேரம் வெளையாட முடியாது"

"ரியல்லி? இப்படி பண்ணினால், கிஸ் பண்ணனும் போல இருக்கா?"

"ஆமா! ரொம்ப செக்ஸியா இருக்கு! சரி வெளையாடுடா!"

"சரி, முகத்தை சிடு சிடுனு வச்சு ஆடுறேன்"

"இப்போவும் அழகாத்தான் இருக்க!"

"சரி, வெளையாட விடுங்க!"

"சரி, ஆடு!"

-----
------

"ஏய் நெஜம்மவே நல்லா ஆடுறடா!"

"சரி யார் வின் பண்ணுறானு பார்ப்போம்!"

---

--

"இதென்ன என் காய்ன் எல்லாம் இப்படி உங்க காய்னை முன்னால வச்சு ப்ளாக் பண்ணுறீங்க?'

"கஷ்டமா இருந்தா, நீ போட்டுத்தா!"

"கொழுப்பா? இருங்க நான் என்ன பண்ணுறேன் பாருங்க!"

"என்ன பண்ணுவ?"

"வெய்ட், வெளையாடுங்க!'

---

---

"வெளையாண்டாச்சு!'

"ரெண்டு வைட் தான் மிச்சமா? எனக்கு இன்னும் 4 காய்ன் இருக்கு"

"திறமையைக் காட்டு!'

---

----

"சரி, ஆடுங்க! இங்கே பாருங்க!"

"ஏய் ஏன் எழுந்துரிக்கிற?! என்ன பண்ணுறடா?"

"தெரியலையா? டாண்ஸ்! உங்கள காண்ஸெண்ட்ரேஷனை டிஸ்ட்ராக்ட் பண்ண!"

"இதெல்லாம் அநியாயம்!'

"இஸ் தட் செக்ஸி?"

"ஓ மை காட்!"

"சரி, ஆடுங்க!"

"ஐ வில் மிஸ், நவ்!'

---

--

"சீ, ஐ மிஸ்ட் இட். இட் இஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் ****! "

"ஹா ஹா ஹா. ஸ்ட்ரைட்டா உள்ள காயின்கூட போக மாட்டேங்கிது!"

"வை டு யு ஷேக் யுவர் பட் லைக் தட்? இட் டேர்ன்ஸ் மி ஆண்!'

"இதுதான் பூட்டி டாண்ஸ்!'

"ஜீசஸ்!'

"லைக்ட் இட்?'

"லவ்ட் இட் டார்லிங்!'

"சரி சரி வெளையாடுங்க!"

-தொடரும்

---------------------

இதில் சோகம் என்னனா, இது மாதிரி ஒரு கதையெல்லாம் இன்னைக்குத் தலைகீழா நின்னாலும் எழுத முடியாது! :(

Thursday, September 10, 2015

சாமி என்னும் கற்சிலைக்கு எதுக்குப் பாலாபிஷேகம்?

ஏழைகள் நிறைந்த நாடு இந்தியா. நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது அபத்தம். ப்ரோட்டீன் ரிச் உணவான பாலை மாட்டை ஏமாத்தி அதிடம் இருந்து பறித்து, மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்துகிறான். சரி, போகட்டும். ஏழ்மை நாடான இந்தியாவில் சினிமா நடிகர் களின்  'கட் அவ்ட்'க்கு பாலை  ஊற்றுவதைவிட  அந்தப் பாலை ஏழைக்குழந்தைகளுக்குத் தரலாம். இதில் மாற்றுக்கருத்து சிந்திக்கத் தெரிந்த மூளை உள்ள யாருக்கும் இருக்காது. அப்படி சிலைக்கு பாலாபிஷேகம் செய்பவன் ஒரு அடிமுட்டாள்!

 



 Image result for பாலாபிஷேகம்



சரி, கடவுள் என  ராமன், இலக்குவன், முருகன், கணேசன், ஐய்யப்பன், சரஸ்வதி, லட்சுமி, காளியாத்தா, மாரியாத்தா னு உள்ள உருவச் சிலைகளை வடித்து மனிதன் தன் மனவியாதிக்கு மருந்தாக பயன்படுத்துகிறான்.

தான் செய்யும் அயோக்கியத்தனத்தால் தனக்கு ஏற்படும் மனப் பிராந்தியை சரி செய்ய இதுபோல் கடவுள்ணு சொல்லிப் பல கற்பனை கேரக்டர்களை உருவாக்கி தன் மனவியாதிக்கு மருந்தாக பயன்படுத்துகிறான். சரி போகட்டும், எப்படியோ அவன் மனம் நன்னிலை அடைந்தால் சரி.

 


அதோட நின்றானா? அதுமட்டுமல்லாமல் அதே சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்கிறான். இது மட்டும் அபத்தம் இல்லையா? எனக்கு விளங்கவில்லை!

 உடனே நம்ம பக்தசிகாமணிகள் எல்லாம் நம்மளை வில்லனைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள்.

மனிதர்களின் முக்கியமாக, பக்தகோடிகளின் மூளை வினோதமானது. தனக்கு விருப்பமுள்ள அபத்தத்தை எல்லாம் கண்டு கொள்ளாது. தனக்குப் பிடிக்காத அபத்தத்தை பூதக்கண்ணாடி இட்டுப் பார்க்கும். வேடிக்கையான உலகம் இது!

Thursday, August 20, 2015

திமு காரன் கழகம் வெட்டிப்பேச்சு மேலே கேஸ் போடாதா?

தி மு காரனிடம் இருந்து சொத்தை மீட்ட கதைனு ஒரு பதிவர் விஷப் பதிவெழுதிக்கொண்டு இருக்கிறார். அதாவது எவனோ ஒரு அரசியல்ப்பொறுக்கி  செய்த அடாவடித்தனத்தை அவன் தி மு காரன் என்கிற முத்திரை கொடுத்து கழகத்தை ஒட்டுமொத்தமாக  இழிவுபடுத்தும் ஒரு கதை இது.

எனக்குத் தெரிய நேத்து தி மு கவில் இருந்தவன் இன்னைக்கு அதிமுகவுக்கு மாறுவான். நாளைக்கு காங்கிரஸ் போவான். ஒருவனை இந்தக் கட்சிக்காரன் என்று முத்திரை குத்துவதைவிட அவன் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி என்கிற முத்திரையே சரி.

எம் சி ஆரே ஒரு காலத்தில் திமுக காரந்தான்.

அடிதடி தாமரைக்கனி அதிமு காரந்தான்.

இதுபோல் விஷம் கலந்து தி மு கழகத்தை இழிவுபடுத்தும் ஒரே எண்ணத்துடன் இந்தக் கதை எழுதுபவரை தி மு க கண்டுகொள்ளாமல் விடுவதும், சட்டப்படி அனுகாததும் எனக்கு  அதிசயமாக இருக்கிறது. இதுபோல் விஷம் கலந்து எழுதும் பதிவர்களை சட்டப்படி துரிதமாக சந்திக்காமல் வளரவிடுவது திமு கழகத்திற்கு நல்லதன்று!

Wednesday, August 19, 2015

என்ன?!! ஒரு ஹாண்டா சிவிக் ஐந்து மில்லியன் டாலரா??!

பொதுவாக அமெரிக்காவில் இந்தியர்கள் விரும்பி வாங்கும் கார், ப்ராண்ட் டொயோட்டாதான். ஒரு டொயோட்டா கேம்ரி இல்லைனா கரோல்லா  வாங்கினாதான் இவர்களுக்கு நல்ல கார் வாங்கிய திருப்தி. லக்ஸுரி கார்னு வேணும்னா லெக்சஸ்- டொயோட்டா மேக்தான். சைனீஸும் இதே வகைதான்.

அமெரிக்கர்கள் ஹாண்டாதான் பெட்டர் கார் என்று நம்பி அதைத்தான் பலர் விரும்பி வாங்குவாங்க. என்னையும் ஒரு ஹாண்டா கைனுதான் சொல்லணும். என்ன ஹாண்டா விலை டொயோட்டாவைவிட கொஞ்சம் அதிகமா இருக்கும். பார்கெய்ன் பண்ணும்போது ஹாண்டா டீலர்  ரொம்ப இறங்கி வரமாட்டாங்கனு சொல்லலாம். அதனால நல்ல கார், கேம்ரி அல்லது கரோல்லா வாங்குறதுக்கு பதிலா எதுக்கு இந்த வீணாப்போன ஹாண்டாக்காரன் விக்கிற அக்காட் அல்லது சிவிக் கு இவ்வளோ காசு கொடுக்கணும் என்பதுதான் இந்தியர்கள் லாஜிக்.

நீங்க பெண்ஸ், பி எம் டபுள்யு கார் வச்சிருக்க வகையராவா? அப்போ கீழே தொடர்ந்து படிங்க!

ஹாண்டா சிவிக் ப்ரைவேட் ஜெட் ஒண்ணு வெளியிட்டு இருக்காங்கலாம்!! ஆமாங்க கார் இல்லை "ஜெட் ப்ளேன்"!!

விலை ரொம்ப ச்சீப்னு சொல்றாங்க!!

சும்மா 4.5 மில்லியன் டாலர் தானாம்!!!





 






அதெல்லாம் அஃபோட் பண்ண  முடியுமா?

மைக்ரோ சாஃப்ட் சி இ ஒ, நம்ம கூகுள் சி இ ஒ சுந்தர் பிச்சை, கமலஹாசன் ரஜினி காந்த் எல்லாம்  வாங்க முடியும்தானே??

Wednesday, August 12, 2015

பார்த்தது ரசித்தது ஹாட்டஸ்ட் லாரா ப்ரெப்பான்!

ஹாலிவுட் படங்களில் ஏகப்பட்ட ஹைப்புடன் வர்ர படங்கள் எதுவும் பார்ப்பதில்லை. ஏதாவது சாதாரணப் படம் பார்ப்பது. சமீபத்தில்பார்த்த படம்,போன வாரம் வெளிவந்த "த கிஃப்ட்". இது ஒரு ஆஸ்திரேலியன் இயக்குனர் இயக்கிய சைக்கலாஜிக்கல் த்ரில்லர். ரொம்ப சிம்ப்பிள் ப்ளாட். ஆனால் படம் ரொம்ப நல்லாயிருந்தது. உங்க ஊரில் திரையில் வரும்போது முடிந்தால் பாருங்க!

The Gift 2015 Film Poster1.png
மேலே உள்ளவர்தான் இயக்குனரும்


 *************************

நெட்ஃப்ளிக்ஸ் பார்க்க எல்லாம் நேரமில்லாததால் உக்காந்து பார்ப்பதில்லை. திடீர்னு என்னதான் படம் இருக்குனு பார்த்தால் சென்னை எக்ஸ்ப்ரெஸ் (ஹிந்தி) இருந்தது. பார்த்தேன். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் முழுப் படமும் உக்காந்து பார்க்க முடிந்தது. ரொம்ப எதிர்பார்த்துட்டேனா என்னனு தெரியலை.

சென்னை எக்ஸ்ப்ரெஸ்

***************************

வேற என்ன இருக்குனு பார்த்தால் "ஆரஞ் இஸ் த நியு ப்ளாக்" னு ஒரு நெட் ஃபளிக்ஸ் ஒரிஜினல் சீரியலை க்ளிக் பண்ணிட்டேன். நல்லவேளை க்ளிக் பண்ணினேன். ஒவ்வொரு சீசனுக்கும் 13 எப்பிசோட் கொண்ட சீரியல் இது. தொடர்ந்து இரண்டு வாரமாக மூனு சீசன் (39 எபிசோட் களையும்) பார்த்து முடிச்சுட்டேன்.

நியூடிட்டி, லெஸ்பியன் செக்ஸ், வயலண்ஸ்னு எல்லாமே அதிகம்தான். இருந்தாலும் சலிப்புத்தட்டாமல் ரெண்டு சீசன் போனது. மூனாவது சீசன் சுமார்தான். இருந்தாலும் பார்த்து முடிச்சாச்சு.

இதை க்ரியேட் செய்தவர் ஒரு பெண். இது பெண்கள் ஜெயில் வாழக்கையைப் பற்றியது.

யாரு நடிச்சு இருக்கா?

Laura Prepon as Alex Vause! OMG she is the hottest!

Loved her!!

ஆக்சுவல் ஹீரோயின் Taylor Schilling ஓ கே ரகம்தான்!

டெய்லர் சில்லிங் as Piper Chapman

உங்க ஊரில் நெட்ஃப்ளிக்ஸ் கிடைத்தால் நீங்க வயது வந்தவரானால் முடிந்தால் பார்த்து ரசிங்க!

எச்சரிக்கை!!!

அலெக்ஸ் வாஸ் அண்ட் பைப்பர் ச்சாப்மேன்


இதில் கன்னா பின்னானு நியூடிட்டி, லெஸ்பியன் செக்ஸ் சீன்ஸ் இருக்கும்! அதெல்லாம் டிஸ்கஸ்டிங்கா இருக்கும்னா பார்க்காதீங்க!!

What do we learn?

அதாவது நீங்க என்னதான் "டீசண்ட்"டான ஆளாக இருந்தாலும், ஜெயில் போன்ற இடத்துக்குப் போனீங்கனா உங்க "டீசண்ஸி" எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்களிடம் இருந்து பறந்து போயிடும். அந்த சூழலில் "சர்வைவல்" க்காக நீங்க ரொம்பவே மாறிடுவீங்க என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


Tuesday, August 11, 2015

கூகுள் சி இ ஒ வாக ஒரு தமிழன் சுந்தர் பிச்சை!!

பெப்சி சி இ ஒ, மைக்ரோ சாஃப்ட் சி இ ஒ க்கு அப்புறம் இப்போ கூகுள் சி இ ஒ வாக ஒரு இந்திய அமெரிக்கர் ஆகியிருக்காரு. சுந்தர் பிச்சை, தமிழ் நாட்டில் பொறந்து வளர்ந்த தமிழன் என்பது அதிகப் படியான செய்தி!

இந்தியா சூப்பர் பவர் ஆகுதோ இல்லையோ. நாடு விட்டு நாடு வந்து சாதிக்கிறார்கள் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் என்பதென்னவோ உண்மைதான்!


Image result for sundar pichai
கூகுள் சி இ ஒ சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துக்கள்!