Monday, May 19, 2014

கொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்!

கல்லூரியில் படிக்கும்போதூ லலிதாவைக் காதலிக்காத ஆளே இல்லை! அவளிடம் ஜொள்ளுவிடாத மாணவனும் ஏன் ஆசிரியரும் அவனுக்குத்தெரிய இல்லை! லலிதா ஒரு அழகுதான். அவள் பேசினால் ஒரு அழகு, நடந்தால் ஒரு அழகு, சிரித்தால் ஒரு அழகு, அவள் கல்லூரி காண்டீனில் காஃபி குடிப்பதும் ஒரு அழகுதான்.

 எத்தனையோ அப்ளிக்கேஷன் வந்தும் லலிதா அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வசந்த்தைத்தான் காதலித்தாள். அன்று அவள் காதல் இனித்தது. அதைவிட அவள் இனித்தாள்.  

ஆனால் இன்று??

 அவர்களுக்கு  கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆகிவிட்டது. இன்றும் லலிதா ஒரு அழகுதான். தன் இதயத்தை வசந்த்திடம் கொடுத்து  அவனைக் காதலித்து மணந்து கொண்ட அவள் வசந்த்தின் எல்லா ஆசையையும் நிறைவேற்றினாளா ? 

பாவம் வசந்த் அன்று இரவும் பெருமூச்சுவிட்டுவிட்டுத்தான் தூங்கினான். அவன் ஆசைகள்  நிராசையாக ஆனதால். வசந்த் எத்தனையோ வாதம் செய்துபார்த்தாலும் லலிதா இந்த ஒரு விசயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். போதாக்குறைக்கு நாளையிலிருந்து,  "கொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்!"னு இவனை தனியாக ஒரு அறையில் தூங்கவும் சொல்லிவிட்டாள்..

 

**********

“அந்தப் படத்தில் பார்த்த இல்லையா லலிதா?”

“அதனால் என்ன வசந்த்? எனக்கு அது மாதிரி படமே பிடிக்கலை. அருவருப்பா இருக்கு. என்னால் ரசிக்க முடியவில்லை”

“நிறையப்பேர் அப்படித்தான் சந்தோஷப்படுத்திக்கிறாங்க.  இந்த ஃபாரத்தில் வாசிச்சியா?”

“ஆமா நீங்க காட்டிய டிஸ்கஸனைப் பாத்தேன். அனானிமஸா ஒரு சிலர் வந்து ஏதோ எழுதி இருக்காங்க. ஆனா எனக்கு சுத்தமாகப் பிடிக்கலை வசந்த்”

“நம்மளும் ட்ரைப் பண்ணினால் என்ன? கேக்கிறேன்னு கோவிச்சுக்காதே. ட்ரை பண்ணாமல் உனக்கு எப்படித் தெரியும்? உனக்கு பிடிச்சாலும் பிடிக்கும்”

“அது ஹைஜீனிக் இல்லை வசந்த். அன்ஹெல்த்தி! மேலும் அப்படி செய்யாதனால நீங்க ஒண்ணும் குறைஞ்சிபோயிட மாட்டீங்க, வசந்த் டார்லிங்!”

“அவங்க எல்லாம் நல்லா இருக்குனுதானே சொல்றாங்க?”

“எனக்கு இது ஒரு லிமிட்டை க்ராஸ் பண்ணி நீங்க மிருகமாகிக்கொண்டு போறமாதிரி இருக்கு. என்னைக்கேட்டால் இதெல்லாம் ஆறாவது அறிவின் துஷ்பிரயோகம்னுதான் சொல்லுவேன்”

“நீ ஏன் அப்படி நினைக்கிற?”

“மன்னிக்கவும் வசந்த், நான் நினைக்கலை, அதுதான் உண்மை!”

“இல்லை லலிதா..”

“சரி, வசந்த், எல்லாம் ட்ரை பண்ணனும்னு சொல்றீங்க இல்ல? ஒரு சில ஆம்பளைங்க ஆம்பளைங்களோடயே படுக்கிறாங்க. ரெண்டு ஆண்கள் சந்தோஷமாக இருக்காங்க. சரியா? அதுவுந்தான் படிக்கிறீங்க. இல்லையா வசந்த்?”

“ஆமா. அதனால?”

“நீங்களும் அது மாதிரி எதுவும் ட்ரை பண்ணியதுண்டா, வசந்த்?"

"ச்சீ ச்சீ!"
 
"என்ன ச்சீ?  ஒருவேளை உங்களுக்கும் பிடிச்சாலும் பிடிக்கும். ட்ரை பண்ணினால்தானே தெரியும்?”

“ச்சீ, நெனச்சாலே எனக்கு வாம்மிட் வருது”

“எனக்கும் அதேபோல்தான் இருக்கு, நீங்க சொல்வது. நான் என்ன சொல்ல வர்றேன்னா, எல்லாரும் செய்றாங்கனு  நம்ம செய்யணும்னு ஒண்ணும் இல்லை, வசந்த். நம்ம நம்மளாவே இருப்போமே, டார்லிங்? நம்ம அளவுக்கு அவங்க சந்தோஷமா இருக்காங்கனு எனக்கு தோனலை”

“எனக்கு போர் அடிக்குது ருட்டீன், லலிதா”

“எதுதான் போர் அடிக்காது? அதுவும் ருட்டீன் ஆனதும் அதுவும் போர் அடிக்கத்தான் செய்யும். அப்புறம் அவன் இப்படி செய்றான், இவ அப்படிச் சொன்னானு புதுசா இன்னோண்ணை  ஆரம்பிப்பீங்க. கோவிச்சுக்காதீங்க உங்களுக்கு எல்லாமே உதிர்த்துவிட்டது வசந்த். எது ரைட், எதுதப்புனு தெரியாமல் பித்துப்பிடிச்சு அலைறீங்க. இட் ஈஸ் டேஞ்ஜரஸ், வசந்த் டார்லிங். யு ஆர் பிகமிங் சிக், டார்லிங்”

“இல்லை லலிதா..”

“வசந்த்! நான் சொல்லுறதை கேளுங்க, ப்ளீஸ்”

“என்ன சொல்லு”

“தேர் இஸ் நோ லிமிட் ஃபார் திஸ். டோண்ட் யு சி தட், டார்லிங்?”


“அதனால?”

“ஐ டோண்ட் வாண்ட் டு ட்ரை  அண்ட் ஃபைண்ட் த லிமிட்”


“லலிதா! யு ஆர் மை பெட்டர் ஹால்ஃப், ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஆனஸ்ட் வித் யு”

ஸோ அம் ஐ, டார்லிங்.  நானும் என்னுடைய  "ஆனஸ்ட் ஒப்பீனின்ய்னை"த் தான் சொல்றேன், வசந்த்”

ஐ லவ் யு லலிதா”

“ஐ லவ் யு மோர், டார்லிங்.
நான் ஒண்ணு சொல்றேன் கேக்கிறீங்களா?”

“என்ன?”

“கொஞ்ச நாள் வேற வேற ரூமில் படுப்போமா?”

“ஏன்?”

“உங்க பக்கத்தில் படுத்துப் படுத்து  எனக்கும்  ருட்டீன் போர் அடிக்குது. சரியா?"

"என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க,  சரியா?”அவள் சிரித்தாள்

“ம்ம்.. சரி நாளையில் இருந்து..”

*****








அதன்பிறகு வசந்த், லலிதாவை அணைத்துக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டான். அவள், அவன் நெத்தியில் முத்தமிட்டாள். வசந்த் மட்டுமல்ல, லலிதாவும்தான் அப்போது ஒரு பெருமூச்சுவிட்டாள். அவளும்தான்  தன் கணவன் எப்படி எல்லாம் இருக்கணும் என்று கனவுகண்டிருக்கிறாள் . வசந்த் இப்பொழுது ஆசைப்படுவது போல,   ஒரு மிருகமாக தன் கணவன் அமையணும் என்று அவள் ஒருநாளும் ஆசைப்பட்டதில்லை. ஆசைகள் நிராசைகள் ஆவது வசந்த்க்கு மட்டுமல்ல, லலிதாவுக்கும்தான்.



6 comments:

Unknown said...

தூக்கத்தில் பாதி ,ஏக்கத்தில் பாதி ..போனபின் வாழ்க்கையில் எதுதான் மீதி ?

வருண் said...

***Bagawanjee KA said...

தூக்கத்தில் பாதி ,ஏக்கத்தில் பாதி ..போனபின் வாழ்க்கையில் எதுதான் மீதி ?***

வாங்க பகவான் ஜி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதினு எல்லாம் போன பிறகு தத்துவங்கள் பேசி, மற்றவர்களுக்கு "என்னை மாதிரி இருக்காதே"னு அறிவுரைகளை அள்ளி விட வேண்டியதுதான். :)

சேக்காளி said...

//“நீங்களும் அது மாதிரி எதுவும் ட்ரை பண்ணியதுண்டா, வசந்த்?"//
கேட்டாளே ஒரு கேள்வி

வருண் said...

வாங்க சேக்காளி! :)

பெண்கள் "பொறுமை காத்து" வாழ்வதால்தான் ஆண்கள் "மானம்" கப்பலேறாமல் இருக்கு!

பொறுமை இழந்து கேள்வி கேக்க ஆரம்பித்தால் ஆண்கள் கதி அதோகதிதான்!

சேக்காளி said...

http://www.valpaiyan.blogspot.in/2010/09/469.html
படிக்கலேன்னா படிச்சு பாருங்க.

வருண் said...

வாங்க சேக்காளி! நன்றி. இப்பொழுதான் வாசிச்சேன். அடக்கிவைக்கப் பட்ட பெண், பொங்கி எழுந்தால் ஆம்படையான் எல்லாம் பொத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான் போன்ற சூழல்! :)