Thursday, December 15, 2011

சாரு எழுதினால் அது விமர்சனம்! மத்தவன் எழுதினால் அவதூறு!

எழுத்தாளர் சாரு, இளையராஜாவுக்கு இசைபத்தி சரியாத்தெரியாதுனு சொல்ற அளவுக்கு பலரையும் கடுமையாக விமர்சிப்பது வழக்கம்! சரி, இவர்தான் உண்மையான இசைஞானி, எல்லாம் அறிந்த மேதைனு வச்சுக்குவோம். எனக்கும் உங்களுக்கும் போல நிச்சயம் இவருக்கும் மற்றவர் படைப்பை கடுமையாக விமர்சிக்க உரிமையிருக்குனு அவரு உரிமையை மதிப்போம்.

ஆனால் இதுபோல் கடுமையாக விமர்சிக்கும் இவரின் படைப்புகளை (எக்சைல் நாவல் பத்தி) இன்னொருவர் கடுமையாக விமர்சித்தால் வலையுலகில் உள்ள இவரோட அடியாட்கள் எல்லாம் வந்து "இது அவதூறு" "இது மண்ணாங்கட்டி" னு ஏன் ஒப்பாரி வைக்கிறாங்கனு தெரியலை? அவங்க வைக்கிற ஒப்பாரியை தன் தளத்தில் இணைத்து அழகு பார்ப்பாரு இந்த "இசை மேதை"! ஊருக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒண்ணா? நீர் மட்டும் எவனுக்கும் எதுவும் தெரியலைனு வாய்கிழியப்பேசுறது? மத்தவன் உமது படைப்பை விமர்சிச்சால் உடனே அவதூறு? என்னை பழிவாங்குறான் னு ஒரே ஒப்பாரி!

இதே சி எஸ் கே பரத்தைக்கூற்று னு ஒரு கவிதைத் தொகுப்பு எழுதி வெளியிட்டார். அதைப்பத்திப் பலவிதமான நல்ல விமர்சனங்களுடன் என்னைப்போல் ஒரு சிலருடைய கடுமையான விமர்சனங்கள் வந்தபோது அதை அவர் எப்படி எடுத்துக்கொள்ளனுமோ அதுபோல் எடுத்துக்கொண்டார்.

இதே சாரு நிவேதிதாகூட அவர் பரதைக்கூற்று பற்றி கடுமையாக விமர்சிச்சபோது அவர் அதை "அவதூறு" னு சி எஸ் கே சொல்லவில்லை! அதான் பெரியமனுஷனுக்கு அழகு!

நிற்க! ஒரு படைப்பை கடுமையாக விமர்சிக்கும்போது "உனக்கெல்லாம் என்ன தகுதியிருக்கு"னு ஒரு சில பொறம்போக்குகள் வந்து சொல்வதை கடுமையான விமர்சனத்தில் சேர்க்க முடியாது! தகுதி தராதாரம் எல்லாம் பொறம்போக்குகள் முடிவு செய்வதில்லை!

எனிவே, சி எஸ் கேவின் கடுமையான விமர்சனத்தை படிச்சுப்புட்டு "பிச்சைக்காரன்" என்னும் சாருவுடைய அடியாளு ஒண்ணு வந்து "இது அவதூறு" "இது அடாவடி" னு ஒப்பாரி வைக்க கெளம்பிப்புட்டாரு! யாரு இந்தப் "பிச்சைக்காரன்" னு பார்த்தால் முழுநேர சாரு ஜால்ரா! இது ஆரம்பம்தான். இனிமேல் பலவிதமான "சி எஸ் கே அட்டாக்" கள் சாரு தளத்தில் வரும்! இப்படி சில வலையுலக அடியாட்களை வச்சு தன் ஆசையைத் தீர்த்துக்கிறாங்களா சாரு போல எழுத்தாளர் மற்றும் விமர்சகர்கள்?

ஆமா, நீங்க விமர்சிச்சால் அது தரமான விமர்சனம்!

மத்தவன் சொன்னால் அது அவதூறு!

When people criticize his work, Charu should learn to take it like a MAN and move on! Why is he acting like a"cry baby" I wonder?! Come on man!

வசந்த மாளிகை படத்தில் நாகேஷ் பாலாஜியிடம் ஒரு வசனம் சொல்லுவாரு!

"ஊர் குடியை எல்லாம் கெடுத்தது நாந்தான்! ஆனால் நீ என் குடியையே கெடுக்கப் பார்க்குறயே?"

சாருவின் இந்த "அவதூறு ஒப்பாரி", வசந்த மாளிகையில் வரும் காமெடியன் நாகேஷைத்தான் நினைவு படுத்துது!

இது பற்றி சாருவிற்கு சி எஸ் கேவின் கடிதம்!

33 comments:

சுதா SJ said...

ஹா ஹா..... சாருவை எல்லாம் படிப்பீங்களா?? நான் சின்ன பையன் சோ சாறு புத்தகங்கள் எங்கள் வீட்டில் தடையப்பா..... :(lol

வருண் said...

நீங்க சாருவுடைய கடவுளைக் கண்டேன் எல்லாம் படிக்கலையா?!!!

இப்போ எல்லாத்தையும் வைரஸ் சாப்பிட்டுப்போயிருச்சாம்!!

வருண் said...

நேரம் இருந்தால் இதைப் படிச்சுப் பாருங்க துஷ்யந்தன்! சாருவின் கடவுளைக்கண்டேனில் கடவுளைக் காணவில்லை!

No Name said...

இதுபோல் பலரும் செருப்பால் அடித்தால்தான் அந்த ஆளுக்கு புத்தி வரும்.

பழமைபேசி said...

அமெரிக்கா வந்தும் உம்மை இங்க காணலியே? தளபதி, நியூயார்க் இரயிலடிக்காரி கூட என்ன வேண்டிக் கிடக்கு??

நசரேயன் said...

என்ன மாப்ள பிரச்சனை என்ன மாப்ள பிரச்சனை

நசரேயன் said...

எலுமிச்சை சாறு வேண்டுமா மாப்ள ?

பழமைபேசி said...

மாப்ள தோப்புல, மாப்ள தோப்புல

பழமைபேசி said...

கள்ளு மொந்தையில எலுமிச்சைச் சாறு ஊத்துவாங்களோ??

நசரேயன் said...

// இவரோட அடியாட்கள் வது "அவதூறு" மண்ணாங்கட்டி" னு ஏன் ஒப்பாரி வைக்கிறாங்கனு தெரியலை?//

குலவை போட்டு ஒப்பாரி வச்சா சரியா ?

நசரேயன் said...

//நீர் மட்டும் எவனுக்கும் எதுவும் தெரியலைனு வாய்கிழியப்பேசுறது?//

பல் டாக்டர் கிழிந்த வாய தைப்பாரா ?

நசரேயன் said...

//மத்தவன் உமது படைப்பை விமர்சிச்சால் உடனே அவதூறு? என்னை பழிவாங்குறான் னு ஒரே ஒப்பாரி!//

ஒப்பாரி ரெண்டு தடவை தானே வந்திருக்கு...

செல்லாது .. செல்லாது

நசரேயன் said...

//
சி எஸ் கே சொல்லவில்லை! அதான் பெரியமனுஷனுக்கு அழகு!
//

அழகு...அழகு

நசரேயன் said...

//When people criticize his work, Charu should learn to take it like a MAN and move on! Why is he acting like a"cry baby" I wonder?! Come on man!//

எங்க அமெரிக்காவுக்கு வரணுமா ?

நசரேயன் said...

//இப்படி சில வலையுலக அடியாட்களை வச்சு தன் ஆசையைத் தீர்த்துக்கிறாங்களா சாரு போல எழுத்தாளர் மற்றும் விமர்சகர்கள்?//

மாப்ள மாதம் ஆயிரம் கொடுத்தா நானும் அடியாள் வேலைக்கு வாரேன்

நசரேயன் said...

//"ஊர் குடியை எல்லாம் கெடுத்தது நாந்தான்! ஆனால் நீ என் குடியையே கெடுக்கப் பார்க்குறயே?//

நல்ல சரக்கா குடிச்சா குடி கெடாது

பழமைபேசி said...

//மாப்ள மாதம் ஆயிரம் கொடுத்தா நானும் அடியாள் வேலைக்கு வாரேன்
//

அமெரிக்க வெள்ளியா? இந்தியப் பணமாலே??

காவ்யா said...

Varun

A blog post shd b free from confusion and clarity comes if u dont mix many things in the same post.

Here, u r criticising Charu's statement that Ilayraja does not know about music. According to u, this criticism s ok from C's point of view; but the reaction to the criticism shd be received by him with grace. He does not do that. He attacks but does not want to receive retailiatory attack.

So far ok.

Thereafter, u r talking abt his defenders.

What s ur point? Shd C receive retaliation with grace?

Shd his supporters accept all kinds of criticism against his work, fair or foul?

I don't understand u.

முனைவர் ப. சரவணன், மதுரை. said...

சாருநிவேதிதாவைச் “சாறு“ என்று உச்சரித்து விமர்சித்தால் ஒரே வரியில் “சாருநிவேதிதா ஒரு சக்கை“ (சாறு அல்ல கச்கை மட்டுமே) எனலாம்.
சாருநிவேதிதாவைப் பற்றிச் சிந்திப்பதே நமக்கு நேரச்செலவுதான்.
- முனைவர் ப. சரவணன்

வருண் said...

***Siddarth said...

இதுபோல் பலரும் செருப்பால் அடித்தால்தான் அந்த ஆளுக்கு புத்தி வரும்.

15 December 2011 4:28 PM***

என்னவோ போங்க! இவரு மற்றவர்கள் படைப்புகளை விமர்சிப்பதைப்போல இன்னொருவர் விமர்சித்தால் அதை அவதூறுனு இவரு ஒப்பாரி வைக்கிறது செம காமெடி!

வருண் said...

**பழமைபேசி said...

அமெரிக்கா வந்தும் உம்மை இங்க காணலியே? தளபதி, நியூயார்க் இரயிலடிக்காரி கூட என்ன வேண்டிக் கிடக்கு??

15 December 2011 5:06 PM***

இந்தியா போயிட்டு இப்போ மறுபடியும் வந்து இருக்காரா? :)

வருண் said...

***பழமைபேசி said...

//மாப்ள மாதம் ஆயிரம் கொடுத்தா நானும் அடியாள் வேலைக்கு வாரேன்
//

அமெரிக்க வெள்ளியா? இந்தியப் பணமாலே??

15 December 2011 8:02 PM***

தளபதி!!

ஏதோ போட்டுக்கொடுக்கிறேன்! ஆமா, நம்ம ஆயுதங்கள் சோடா பாட்டில், சைக்கிள் செயினு, திருக்கை வாலு எல்லாம் இருக்கா? அதை மொதல்ல சொல்லு மாப்பூ!

வருண் said...

***tamilwriter.saravanan saravanan said...

சாருநிவேதிதாவைச் “சாறு“ என்று உச்சரித்து விமர்சித்தால் ஒரே வரியில் “சாருநிவேதிதா ஒரு சக்கை“ (சாறு அல்ல கச்கை மட்டுமே) எனலாம்.
சாருநிவேதிதாவைப் பற்றிச் சிந்திப்பதே நமக்கு நேரச்செலவுதான்.
- முனைவர் ப. சரவணன்

16 December 2011 4:17 AM***

அதென்னவோ உண்மைதாங்க! :-)

ராவணன் said...

நான் முன்னரே எழுதியுள்ளேன், யார் அந்த சாறு?

தினமலர் குல்லாமணியின் அடிக்கவசமா?

sunaa said...

இது எனக்கு அதிர்ச்சி தருது ..
. ஒங்களுக்கு இருக்குற 'மூளைக்கு' நீங்க அவரு வாசகர் வட்டத்துல இணைஞ்சிருக்கொனும் ...ஹீ ..ஹீ...

அமர பாரதி said...

வருன்,

பேஸ் புக் நண்பர்கள் மேலயும் வேலை முடிந்ததும் காறித் துப்பி விட்டார் போல.

அமர பாரதி said...

வருன்,

பேஸ் புக் நண்பர்கள் மேலயும் வேலை முடிந்ததும் காறித் துப்பி விட்டார் போல.

வருண் said...

***அமர பாரதி said...

வருன்,

பேஸ் புக் நண்பர்கள் மேலயும் வேலை முடிந்ததும் காறித் துப்பி விட்டார் போல.

16 December 2011 11:18 AM***

He is sort of dangerous because he does not have any qualities or morals or principle or ANYTHING!

He was going behind Cho Ramasamy for a "small sum of money" he could make by writing some bullshit in thug-fucking-lak.

What does it tell you?

He will go behind ANYBODY and do anything for money!!

He is such a low character! He has been consistent for years though. How does he have any friends?? That is impossible for people like him to have any friends. If he does, I dont know what they are really either!

அமர பாரதி said...
This comment has been removed by the author.
அமர பாரதி said...

Varun,

He doesn't need any friends. Have you read his article about facebook friends? His intention is very clear that he wants to mint money and he knows that it is not possible with his writing skills. His books clearly show that and people should know all this. But the sad part is that everybody wants to be friends with a famous personality like him. He uses that preisely for his benefit.

வருண் said...

***everybody wants to be friends with a famous personality like him. He uses that preisely for his benefit.***
இந்த விசயத்தில் சாருவைக் குறை சொல்ல முடியாது! இவனுகளாப் போயி நான் சாரு ஃப்ரெண்டா இருக்கனும், அது எனக்குப் பெருமைனு நெனச்சா அது நிச்சயம் சாரு தப்பு இல்லை. \

தன்னறிவு இருக்கனும்! சரி, அது இல்லைனா சொல்லறிவாவது இருக்கனும்! அறிவே இல்லைனா? தொலையிறானுக இந்த அறிவுகெட்டமுண்டங்கள் விடுங்க!

அமர பாரதி said...

I agree with you. They won't change and Charu also knows that. He will find new people and use them. He would have expected all of his 4000 friends in facebook will buy the book and might have gotten disappointed. It is funnly that he sold a lot of "FIRST COPIES" of his new book.

பல்பு பலவேசம் said...

யாரயாவது வசை பாடியே ஒருவர் முன்னுக்கு வந்தார் என்றால் அவர் சாருதான்!80 களில் சுரா 90 களில் கமல்,ஜெ.மோ இப்போ வேற ஆள் புடித்துள்ளார் போல!செம காமடி பீசு அவர்!கண்டிப்பா அவர் எழுத்தை படிங்க!செம காமெடியா இருக்கும்!