Monday, November 29, 2010

நல்லவேளை நந்தலாலாவை சன் நெட்வொர்க் தயாரிக்கலை!


ஜப்பானிய மொழிப்படத்தை தழுவி மிஸ்கின் (ராஜா) இயக்கி மற்றும் இசை ஞானி இளையராஜா இசையமைத்து வெளிவந்துள்ள ஒரு தரமான சினிமாதான் நந்தலாலா! யாருக்கு? பொதுமக்களுக்கு எப்படினு இன்னும் தெரியலை. ஆனால் உலக சினிமா, கொஞ்ச காசுபோட்டு நல்ல சினிமா த்ரனும்னு நெனைக்கிறவங்களுக்கு!

இதுவரை விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் பலர் இந்தப்படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். அப்படி ஆஹா ஓஹோனு புகழ்ந்து எல்லோரும் எழுதியுள்ளதால், இனிமேல் இந்தப் படத்தை நெகட்டிவாக விமர்சிக்க இப்போதைக்கு சாருநிவேதிதாக்குக் கூட தைரியம் வராது.

ஆமா ஜப்பானியப் படத்தை தழுவி எடுத்த படமாமே?

மிஸ்கின் ஜப்பானியப் படத்தை சுட்டு இருகிகாராமே?

அப்படியே இருந்தால் என்ன? இல்லை ஜீனியஸ் மிஸ்கின் காப்பியடிச்சா தான் என்ன பெரிய தப்பு? அதெல்லாம் பெரிய தப்பில்லை! ஆனா இதே வேலையை (தழுவலை) நம்ம கமல் செஞ்சிருந்தா? இந்நேரம் கமலுக்கு கண்ணா பின்னானு திட்டு விழுந்து இருக்கும். அதென்னவோ தெரியலை ரொம்பப் பெரிய ஆளாயிட்டாத்தான் இந்தத் தழுவல் பிரச்சினை அதிகம்.

சரி, காப்பியடிச்சா அந்த ஸ்டில்லைக் கூட அப்படியே காப்பி அடிக்கனுமா என்ன? இல்லை இல்லை தழுவினால் அந்த ஸ்டில்லைக்கூட விடக்கூடாதா?..

பதிவுலகில் ஒரு சில விமர்சகர்கள் இருக்காங்க. இவங்க எப்படினா சன் நெட்வொர்க் ஒரு படத்தை விநியோகம் செய்தால், அதை அறவே வெறுத்து, அவர்கள் மேலே உள்ள வெறுப்பில் அந்தப் படத்தை நியாயமாக விமர்சிக்காமல், கேவலமான ஒரு விமர்சனத்துடன் வருவது போலிருக்கும். ஒரு நல்ல விமர்சகர், படத்தின் பட்ஜெட்டைப் பார்க்காமல், படத்தை யார் தயாரித்தது என்பதைப் பார்க்காமல் அதை விமர்சனம் செய்யனும் எனபது என் தாழ்மையான எண்ணம். ஆனால் அந்த அளவுக்கு நம்ம பதிவுலகில் உள்ள பல பதிவர்களுடைய தரம் இன்னும் உயரவில்லை!

நான் சன் மற்றும் மு க குடும்பத்தினருக்கு வக்காலத்தெல்லாம் வாங்கவில்லை! "வ" குவாட்டர் கட்டிங் போன்ற படங்கள் ஃப்ளாப் ஆனதில் சந்தோஷப் பட்ட முதல் ஆள் நாந்தான். இதே நந்தலாலா படத்தை சன் நெட்வொர்க் அல்லது யாராவது மு க குடும்பம் தயாரித்து இல்லைனா விநியோகம் செய்து இருந்தால் இதற்கு நொடிக்கொருமுறை விளம்பரம் கொடுத்து இருந்தால்? அதன் விளைவு நந்தலாலாவுக்கு பதிவுலகில் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்தேன்.
ஒரு சில பதிவர்களின் விமர்சனமே இப்போது வந்துள்ளதுக்கு எதிர் மாதிரியாக வந்திருக்கும்!

எந்திரனாக இருக்கட்டும், நந்தலாலாவாக இருக்கட்டும் இல்லைனா மைனாவாக இருக்கட்டும், தன் சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்துப் படத்தை படமாகப் பார்த்து விமர்சிக்கும் நிலை வந்தால் நல்லாயிருக்கும்! ஒரே படத்தை சன் குழுமும் எடுத்தால் ஒரு மாதிரியும், ஞாநி தயாரித்தால் ஒரு மாதிரியும், ப்ரமிட் சாய்மீரா தயாரித்தால் ஒரு மாதிரியும் விமர்சிக்க வேண்டியதில்லை!

Saturday, November 27, 2010

ஆர்யாவின் அநாகரிகப் பேச்சு!

"நான் ஒரு மலையாளி என்பதில் பெருமைப்படுகிறேன். பொதுவாக மலையாளிகள் ரசனையில் உயர்ந்தவர்கள். க்ளாஸ் படங்கள், உயர்ந்த நடிப்புதான் அவர்களுக்குப் பிடிக்கும். தமிழர்கள் ரசனை அப்படியல்ல. சுமாராக நடித்தாலும் லட்சங்கள், கோடிகளைக் கொட்டுவார்கள்" இப்படி ஆர்யா சொன்னதாக சொல்லப்படுகிறது!

தமிழன் ரசனையை, தமிழன் தரத்தை, தமிழனைக் கேவலப்படுத்த சாருநிவேதிதா, ஜெயமோகன், ஜெயராம்னு ஏகப்பட்ட பேரு கிளம்பிட்டார்கள். இதைப் பத்தி நான் ஏற்கனவே எழுதியும் இருக்கேன். இப்போ இந்த ஆர்யானு ஒரு அரைவேக்காடு!

ஒருபக்கம் “யார் இந்த ஆர்யா? முந்தா நேத்து பெய்த மழையில் நேத்து மொளச்ச காளான்! தமிழ் நாட்டுக்கு பொழைப்புக்காக வந்தவன். ஆனா திமிரைப் பாரு! இவன் தமிழர்களை விட தரத்தில் உயர்ந்த மலையாளியாம்! அவன் மட்டமான புத்தியக் காட்டிட்டான் பாரு!” னு கொதிக்கிறார்கள் பலர்.

இன்னொருபக்கம் அவரு “உண்மையைத்தானே சொல்றாரு? நம்மாளு ரசனை மட்டமானதுதான்” னு கைதட்டும் தமிழர்களும் பலர் இருக்காங்க!

இவர்கள் ரெண்டு கோஷ்டியும் அடிச்சுக்குவானுக! இதுதான் தமிழனுக்கே உள்ள தனித்துவம்னு வெட்கப்படலாம்! இல்லைனா பெருமையாவும் சொல்லிக்கலாம்!

ஆர்யாவுக்கு ஏன் கொஞ்சம்கூட நாகரிகமாகப் பேசத்தெரியலை? தமிழ் ரசிகர்களை இறக்காமல் அவரை இறக்கி உண்மையைப் பேசியிருக்கலாமே?

“தமிழ் சினிமாவில் பணம் அதிகம்! தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகம். நான் ஒரு மலையாளி! எனக்குப் பணம்தான் முக்கியம்! மலையாள சினிமால நடிச்சா வாங்குகிற பணத்தில் வாழ்நாள் பூரம் ஏழையாவேதான் இருப்பேன். பணத்துக்காகத்தான் தமிழ் சினிமால இருக்கேன்! நீங்களும் எனக்கு அதிக சம்பளம் கொடுத்து படம் எடுத்தால் நான் நிச்சயம் மலையாள்ப் படத்தில் நடிப்பேன்”னு சொல்லியிருந்தால் ஆர்யாவின் ஆனஸ்டியை நான் பாராட்டி இருப்பேன்.

ஆர்யாவை தமிழ் சினிமா உலகம் தண்டிக்கிறது, கண்டிக்கிறதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆர்யா இப்படிப் பேசியதால் நிச்சயம் ஒரு ஆயிரம் இல்லை லட்சம் தமிழர்கள் இவர் படத்தை புறக்கணிக்கத்தான் செய்வார்கள். இதனால் நஷ்டப் படுவது தமிழர்கள் அல்ல! நிச்சயம் ஆர்யாதான்!

எனக்கு ஆர்யா மலையாளினு இப்போத்தான் தெரியும்! இதுவரை இவர் ஒரு தமிழ் நடிகர்னுதான் இவரைப் பார்த்தேன். ஆனால் இனிமேல்? தன்னைவிட தமிழனை மட்டம்னு நினைப்பவன்னு நினைப்பேன்!

எனக்கு மலையாளிகள்மேலே வெறுப்பை உண்டாக்குவது இதுபோல் அறிவுகெட்ட மலையாளிகள்தான்! ஆமா இவங்க சினிமாவில் ஆஸ்கரும், அறிவியல் மற்றும் இலக்கியத்தில் நோபல் பரிசுமா வாங்கி குவிச்சுட்டாங்க பாருங்க! எதுக்கு இந்த நெனைப்பு??

Monday, November 22, 2010

தீபாவளி படங்களின் தலைஎழுத்து! “வ” ப்ளாப்!


தீபாவளிப் படங்களின் தலை எழுத்து (வெற்றியா தோல்வியா?) ஒருவழியாக தெரிந்துவிட்டது!

* தனுஷின் உத்தம புத்திரன் ஓரளவுக்கு வெற்றிப்படமாகி விட்டது. விமர்சகர்கள் பார்வையில் மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப்படம் ஒரே மாதிரி வெற்றி என்கிற முடிவைத்தான் தந்திருக்கு! கவுண்டர் கம்யுனிட்டி கோவை ஏரியாவில் அவர்களை தாக்கியதற்காக இதை எதிர்த்தாலும், தனுஷ் மன்னிப்புக் கேட்டு சமாளித்துவிட்டதாகத் தோனுது.

* பிரபு சாலமனின் மைனா படம் முதலில் க்ளிக் ஆகாவிட்டாலும், மக்கள் இந்தப்படத்தைப் பற்றி நல்லவிதமாக வெளியில் சொன்னபடியாலும், நல்லவிதமாக விளம்பரம் செய்ததாலும் படம் கொஞ்சம் ஸ்லோவாக பிக் அப் கி வெற்றியடைந்துவிட்டது.

* புஷ்கர்- காயத்ரியின் “வ” குவாட்டர் கட்டிங்க்கு வரிவிலக்கும் கிடைக்கவில்லை! விமர்சகர்களையும் இந்தப்படம் ஆகவரவில்லை! பாக்ஸ் ஆபிஸிலும் படம் மண்ணைக்கவ்வியது!

தீபாவளிக்கு 25 நாட்கள் முன்பே, 2000 பிரதிகள் ரிலீஸ் பண்ணப்பட்ட, சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 50 நாட்களை கடந்த பிறகும், இன்னும் நல்லாவே போய்க்கொண்டிருக்கிறது. முக்கியமாக, தமிழ்நாட்டைவிட, மலேசியா, சிங்கப்பூர், கேரளா, ஆந்திரா, பெங்ளூர் போன்ற டெரிட்டோரிகளில் படம் இன்னும் ஸ்ட்ராங்கா போய்க்கொண்டு இருக்கிறது!

Sunday, November 21, 2010

விவாதிக்க எதிராளிக்குச் “சுதந்திரம்” மிகவும் அவசியம்!

ஒருவர் தன் தளத்தை பாதுகாக்க மாடரேஷன் எனேபில் செய்வதில் தப்பே இல்லை! ஆனா, “சேர்ந்து வாழுதல்” போன்ற கலாச்சார மாற்றம் பத்தி பேசும்போது, அது சீரியஸான ஒரு விவாதமாகிறது. இதில் விதண்டாவாதம், தனிநபர் தாக்குதல் போன்றவை இடையில் வந்தாலும், மாடெரேஷன் எனாபிள் செய்து மட்டுறுத்தல் செய்யும்போது, சரியாக விவாதம் செய்ய இயலாமல்ப் போய்விடுகிறது, இதில் சூடு தணிந்துவிடுகிறது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம்.

ஒரு வாதம்னு வரும்போது, அதில் வெற்றி தோல்வி என்பதென்னவோ இல்லை. ஆனால் ஒரு விவாதத்தில் எதிராளியுடைய கருத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியம் கொடுக்கனும். சும்மா “ஆமா சார், சரியா சொன்னீங்க!” நு ஜால்ரா பின்னூட்டங்களால் எந்தப் பிரையோசனமும் இல்லை. எதிராளியை வாதம் செய்யவிட்டு அவருக்கு தெளிவாக பதில் சொல்வதே அழகு, நாகரிகம்!

ஒரு ஆக்கம், கவிதை, கதைனு வரும்போதுதான் அதுபோல் ஊக்குவிக்கும் பின்னூட்டங்கள் வருவது படைப்பாளிக்கு நல்ல ஊக்குவிப்பாகத்தான் இருக்கும். ஆனால் விவாதத்தில் ஜால்ரா பின்னூட்டத்தைவிட மாற்று அல்லது எதிர் கருத்துப் பின்னூட்டங்களே அந்தப்பதிவின் தரத்தை உயர்த்தும் என்று நான் நம்புறேன். அதனால் எதிராளி கருத்தை சுதந்திரமாக தொடர்ந்து சொல்லவிடாமல் மாடெரெஷன் எனேபிள் செய்து வைப்பது எனக்கு சரியாகப் படவில்லை!

பதிவர்கள் குடுகுடுப்பை, முகிலன் மற்றும் வால்ப் பையன் (for some time), துமிழ் போன்றவர்கள் மாற்றுக்கருத்தைச் சொல்ல மட்டுறுத்தல் செய்யாமல் இந்தப் பேச்சுச் சுதந்திரம் கொடுத்ததற்கு நன்றி! அம்புட்டுத்தான்!

Wednesday, November 17, 2010

பாணு, ரிலாக்ஸ் ப்ளீஸ்! -கடலை கார்னர் -64 (18+)

கடலை கார்னர் (63) இங்கே!

யாரோ கதவைத் தட்டினார்கள்!

"வாங்க பாணு! பார்த்து ரொம்ப நாளாச்சு!"

"அவளை எங்கே, கண்ணன்?"

"யாரு, பாணு?"

"யாரா? பிருந்தாதான்! எங்கே கண்ணன்?"

"பிருந்தாவுக்கும் எனக்கும் ஒரு சின்ன சண்டை. அதனால என்ன "பாஸ்ட்டர்ட்"னு திட்டிட்டு கோவிச்சுட்டு போய் பெட்ரூம்ல படுத்து இருக்கா! அவளைப் பார்க்கவே பயம்மா இருக்கு..அதான்.."

"நெஜம்மாவா?"

"உங்க மேலே சத்தியம்!"

"என் மேலேயா? ஹா ஹா ஹா!'

"சரி, என்ன வேணும் உங்களுக்கு, பாணு?'

"ஐ நீட் ட்வெண்டி டாலர் காஷ், கண்ணன். இட்ஸ் கைண்ட் ஆஃப் அர்ஜெண்ட். சம்வொன் இஸ் வெய்ட்டிங்!'

"நான் வேணா தரவா? யு கேன் பே பாக் டு பிருந்தா!'

"சரி கொடுங்க, ப்ளீஸ்!"

"இந்தாங்க!"

"ரொம்ப தேங்க்ஸ் கண்ணன்!"

"சரி, நான் உள்ள போயி அவளை சமாதானம் பண்ணுறேன்!'

"பை, கண்ணன்!. நான் கொஞ்ச நேரத்திலே வர்றேன்னு சொல்லுங்க!"

----------------------------------

"ஏய்! என்ன குளிருதா? கம்ஃபோர்ட்டரை வச்சு மூடிக்கிட்டு இருக்க?"

"கொழுப்பா? ஒண்ணும்போடல!"

"அதான் ஏன்?"

"ஏனா? நான் ரொம்ப சூடா இருக்கேன்! ஆமா, யார் அது, கண்ணன்?'

"உன் ஃப்ரெண்டு பாணுதான்!"

"அவளுக்கு நேரம் காலம் தெரியாது! என்னவாம்?"

" திடீர்னு கதவைத் தட்டினாள். உன்னைப் பார்க்கனும்னா... நான் உன்னை எப்படி இப்படி பார்க்க விடுறது?"

"ஹா ஹாஹா! ஏன் பார்த்தால் என்ன?"

"எனக்குப் பிடிக்காது! "

"அவ என்ன பொண்ணுதானே?"

"அதனாலென்ன? ஒரு பழைய பாட்டு இருக்கு! "மங்கை உன் அழகை மாதர்கள் கண்டால் மயங்கிடுவார் கொஞ்ச நேரம்"னு!"

"நெஜம்மாவா?"

"எது?'

"அப்படி ஒரு பாட்டு இருக்கது?"

"ஆமா!"

"ரொம்ப gayish ஆ இருக்கே?"

"பாணு, gay இல்லைல?"

"ஹா ஹா ஹா. எனக்கெப்படித் தெரியும்?"

"சந்தேகமா இருந்துச்சு. அதான் ஏதோ பொய் சொல்லி அனுப்பி வச்சேன்."

"எதுக்கு வந்தாள் னு நீங்க சொல்லல."

"ஏதோ, அர்ஜெண்ட்டா ட்வெண்ட்டி டாலர் வேணும்னு கேட்டாள்"

"சும்மா உள்ள அனுப்பி வச்சிருக்க வேண்டியது தானே?"

"அது சரி! அவகிட்ட என்ன சொல்லுவ?"

'உண்மையத்தான்"

"ஒருவேளை, அவள் லைவ் பார்க்க உக்காந்துட்டானா? நான் ரொம்ப ஷை டைப் டா"

"ஹா ஹா ஹா! இந்த மாதிர்யெல்லாம் என்னால கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது!'

"இதெல்லாம் ஆண்களுக்கே உள்ள ஒரு அசிங்கப் புத்தி! அதான் எதையோ சொல்லி அவளை இந்தப்பக்கமே விடாமல் அனுப்பி வச்சேன்!"

"கண்ணன், எல்லா ஆண்களையும் ஏன் உங்க லிஸ்ட்ல சேர்க்குறீங்க?"

"எனக்குப் பெரிய மனசு. நான் மட்டும் க்ரிடிட் எடுத்துக்கிறதில்லை. ஐ ஷேர் வித் அதெர்ஸ்!"

"ஹா ஹா ஹா!"

" ஏய் அவ மறுபடியும் வறதுக்குள்ளே எதையாவது மாட்டிக்கோ. உள் ஆடையெல்லாம் வேணாம்!"

"சரி, அந்த நைட்டி எடுத்துத் தாங்க!"

"இதா?"

"ஆமா!"

"இந்தா எனக்கு அப்படைட் எதுவும் போடாமல் மாட்டிக்கோ!"

"என்னை நேக்கடா பார்க்க, நீங்க ஏன் இப்படி வெட்கப்படுறீங்க?"

"இது வெட்கம் இல்லை!'

"வேற என்ன அது?"

"இட் இஸ் ஹார்ட் டு எக்ஸ்ப்லைன்! ஏய் அவ மறுபடியும் கதவை தட்டுறா. நான் போய் என்னனு பார்க்கிறேன். நீ ஒழுங்கா உடம்ப மறைச்சுக்கிட்டு வா!"

***********************

"வாங்க பாணு!"

"வாடி பாணு!"

"என்னடி, கண்ணன் மேலே கோபமா இருக்கனு சொன்னாரு."

"ஆமா கோபம்தான்"

"ஏன்?"

"இங்கே பக்கதில் வா. காதுல சொல்றேன்!'

"ஏன் நான் கேக்கக் கூடாதா, பிருந்த்?"

"இது ரொம்ப மோசமா இருக்கும் அதான்!'

"சரி, சொல்லுடி, பிருந்தா!"

" "

"யு ஆர் ரியல்லி டர்ட்டிடி பிருந்தா!"

"என்ன சொன்னாள் பாணு?"

"ஏன் கண்ணன் இவ இப்படி டேட்டியா பேசுறா?"

"என்னடி சொன்ன?"

"ஒண்ணும் பெருசா இல்லை, கண்ணன்!'

"ஒண்ணும் இல்லையா!!!"

"பாணு! ரிலாக்ஸ் ப்ளீஸ்!"

-தொடரும்

கேள்வியும் நானே பதிலும் நானே (3) கலாச்சார ஸ்பெஷல்

* வாதம்னா என்ன? விதண்டாவாதம்னா என்ன?

நம்ம பேசுறது வாதம். நம்ம எதிராளி பேசுறதை விதண்டாவாதம்னு சொல்லலாம்.


* புதுமைப்பெண்களின் கலாச்சார லெக்ச்சர்கள் பத்தி?

இன்னைக்கு அவங்க எழுதறத ஒரு பத்து வருசம் சென்று அவங்க வாசிச்சுப் பார்த்து, ஒரு காலத்தில் நான் இப்படி இருந்து இருக்கேன்னு தன்னைத்தானே பார்த்து சிரித்துக்கொண்டு மெடிட்டேஷன் பண்ணப் போறவங்கள நெறைய பார்த்து இருக்காங்களாம் அனுபவசாலிகள். இளம்கன்று பயமறியாதாம், அறியாமையால்! மற்றும் அனுபவம் போதாமையால்.

பத்து வருசத்துக்கு அப்புறம் நான் அப்படி இருக்க மாட்டேன் என்பதை இப்போவே அடிச்சும் பேசுவாங்களாம் இந்த ஞானிகள்- அறியாமையால்.

* பதிவுலகில் இப்போ என்ன நடக்குது?

கருத்துச்சண்டையைவிட கோஷ்டிமோதல்தான் இப்போ அதிகமா நடக்குது. எதுக்கெடுத்தாலும் தன் கருத்தை சொல்றதை விட்டுட்டு எதையாவது செட்டு சேர்ந்துகொண்டு ஒளறுறது. செட்டு சேர்ந்து ஒருவரை ஒருவர் "கவர்" செய்வதால் வாதத்தில் வென்றதா ஆகாது! ஒரு முட்டாள்தனமா கருத்தை ஒருத்தர் சொல்லி அதை பலர் ஆமானு சொன்னாலும் அந்தக் கருத்து சரினு ஆயிடாது.

* ஆமா, இல்லாத கடவுளை பார்க்க முடியிறவங்க, ஏன் இருக்க கலாச்சாரத்தை, அதில் ஏற்படும் கேவலமான மாற்றங்களைப் பார்க்கமுடியாமல் லெண்ஸ் போட்டு தேடுறாங்க?

இன்னைக்கு லிபெரல், லிவிங் டுகெதர் சரினு சொல்லுவாங்க, இதப்பத்தி வாய்கிழிய பேசுவாங்க, கடைசியில் வெட்கமே இல்லாமல் அரேஞிட் மேரேஜ் பண்ணிக்கிட்டு வந்து நிப்பாங்க.

தன்னையே இன்னும் புரிஞ்சுக்காதாவர், கலாச்சாரத்தை அல்லது அது மாறும் விதத்தை எப்படிப் புரியமுடியும்?

* தனிநபர் தாக்குதல்னா என்ன?

ஒரு விவாதத்தில் "இவனுக்கெல்லாம் யாரு யு எஸ்ல விசா கொடுத்தானு தெரியலைனு" நீங்க அமெரிக்கால இருக்கதை தெரிந்ததும் உங்க எதிராளி (மாற்றுக் கருத்து உள்ளவர்) சம்மந்தமே இல்லா இடத்தில் சொல்றது.

அப்புறம், உங்க வாதத்தைப் பார்த்து (இல்லை விதண்டாவாதத்தை) வெறுத்து, உங்களை வெறுத்து, உங்களை "க்ரீச்சர்" அது இதுனு வந்து கேவலமாத் திட்டுறது.

அவங்க தளத்தில் கண்ட நாயையும் அடியாள் மாதிரி விட்டு தனக்கு எதிர் கருத்து சொல்றவனை திட்டவிட்டு கேவலமா மாடெரேஷ்ன் பண்ணுவது.

இதுபோல் செய்வதற்கு எதிர் கருத்தை தூக்கி எறியலாமே குப்பைத் தொட்டியில்?. நீங்கதானே ப்ளாக் அட்மினிஸ்ட்ரேட்டர்?னு கேக்காதீங்க. இது வெள்ளக்காரனிடம் கற்ற கலாச்சாரமா இருந்தாலும் இருக்கும்! அதனால் உயர்வானது!

Monday, November 15, 2010

திரைமணத்தில் எனக்கு ரெண்டு ஓட்டுப்போட முடியுது?!

என்ன காரணம்னு தெரியலை, நான் அவ்ளோ சீரியஸா என் பதிவுக்கே ஓட்டுப் போடுவதில்லை. ஆனால் திரைமணத்தில் முதலில் இடுகையை இணைக்கும்போது ஒரு ஓட்டு விழுகிறது. முன்பொருமுறை தமிழ்மணத்தின் மூலமும் இன்னொரு ஓட்டுப் போட முடிந்தது. திரைமணம் அக்கவுண்ட் தனியா என்னனு தெரியலை. ஒரு மாதிரி கில்ட்டியா இருந்தது- கள்ள ஓட்டுப் போடுவது. சரினு அதுக்கப்புறம் அதுபோல் தவறு செய்யாமல் கவனமாயிருந்தேன். நமக்கு எதையுமே ஆராச்சி செய்ற ஒரு புத்தி. சரி இந்தப் பிரச்சினையை தமிழ்மணம் சரிசெய்து இருக்குமானு என்னுடைய நேற்றைய பதிவு வாலி 1000 க்கு இப்போ தமிழ்மணம் மூலம் ஓட்டுப் போட்டுப் பார்த்தேன். (திரை மணம், தமிழ் மணம் ரெண்டுக்குமே ஒரே ய்யுசர் நேம் தான்) அதுவும் வொர்க் ஆகுது.

இதுபோல் ஒரு சின்ன க்ளிட்ச் இருப்பதையும், தெரிந்து செய்த என் தவறை சொல்லவே இந்தப் பதிவு.

இனிமேல் தமிழ்மணம் மூலம் ஓட்டுப்போடாமல் கவன்மா இருக்கேன். தமிழ்மணமும் இதுபோல் உள்ள சின்ன பிரச்சினையை சரி செய்தால் நல்லது! ரெண்டு ஓட்டுப்போட்ட குற்றத்துக்குகாக் நானே கில்ட்டியா ஃபீல் பண்ணுறேன். தயவு செய்து யாரும் என்னை திட்டாதீங்க நான் அழுதிடுவேன்! :)

நாங்க கலாச்சாரம் இல்லாத காட்டுமிராண்டிகள்! புதுமைப்பெண்

ப்ரியா அவர்களின் இதுதாண்டா கலாச்சாரம், தொடருகிறது! அடுத்த பகுதியை "இதுதாண்டி கலாச்சாரம்!" ஆக்கனும் அவங்கனு தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்! ஆமா ஏன் இந்த டிஸ்க்ரிமினேசன்??? ஆம்பளைகளை மட்டும்தாம் இப்படி விளிக்கனுமா? இல்லை தமிழ்க் கலாச்சாரம் இவங்கள தடுக்குதா? அது தெரிஞ்சா ஏன் இப்படி கலாச்சாரம் எல்லாம் கரச்சிகுடிச்ச மாதிரி வியாக்யானம் பேசுறாங்க?

ப்ரியா அவர்கள் என்ன சொல்ல் வர்றாங்கனா...அதாவது அவங்க எப்பிசோட்கள் மூலமாக

நிற்க,

கெளசல்யா அவர்களின் பதிவை
இவங்க விமர்சிச்சது தனி நபர் தாக்குதல் இல்லைனா இதெப்படி தனிநபர் தாக்குதலாகும்?
லாஜிக் இடிக்கல?

தொடரலாம்ங்க இப்போ!

ஆமா, நாங்க கலாச்சார்ம் இல்லாத காட்டுமிராண்டிகள்தான். மிருகங்கள் போல ஐந்தறிவோடதான் வாழ்ந்துக்கிட்டு இருந்ததோம். மேலும் எங்க அப்பா அம்மா தாத்தா பாட்டிக்கெல்லாம் 5 அறிவுதான்னு ஒத்துக்கிறோம். அதான் எங்களோட கலாச்சாரம் இப்படி இருக்கு! இப்போத்தான் எனக்கு ஆறாவது அறிவு வந்திருக்கு அதுவும் வெள்ளைக்காரன் பரிச்சயம், மேலும் கமலஹாசன், குஷ்பு, சாருநிவேதிதா போன்ற ஞானிகளின் எப்படி வாழனும்னு சொல்ற ஒப்பீனியனை கேட்டவுடன்!

அதுவும் ஆடையில்லாம்ல் திரிஞ்ச எங்களுக்கு வெள்ளைக்காரன்தான் எப்படி ஜீன்ஸ் போடற்துனு சொல்லிக்கொடுத்தான். அதனால நாங்க இனிமேல் வெள்ளைக்காரனுக்குத்தான் கோயில் கட்டி கும்பிடுவோம். திருவள்ளுவர், பாரதியெல்லாம் எங்க கலாச்சாரத்தை நாறடிச்சவங்க! நான் அடுத்த ஜெண்மத்திலாவது, பொண்டாட்டியிருக்கும்போது கேர்ள் ஃப்ரெண்ட் வச்சுகிட அனுமதிக்கிற வெள்ளைக்காரியாப் பிறக்கனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்னு சொல்றாங்களா?

இதுதாண்டா எங்க அசிங்கமான காட்டுமிராண்டி கலாச்சாரம்னு நம்மை நாமே இழிவு படுத்துவது யாருக்கும் நோபல் சமாதானப் பரிசு தரப்போவதில்லை! இதுபோல் நம்மை நாமே கேவலப்படுதுவதால்தான் வெள்ளைக்காரன் இன்னும் நம்மை காட்டுமிராண்டியாவே நினைக்கிறானா?

அப்புறம் நம்ம புதுமைப்பெண்கள் தெரிஞ்சுக்க வேண்டியது!

நான் பார்த்தவரைக்கும்,

ஒரு கன்சர்வேட்டிவை, கேலிசெய்யும் "புதுமைப்பெண்" மற்றொரு "மாபெரும் புதுமைப்பெண்" பார்வையில் கன்சர்வேட்டிவாகவே தெரிகிறார். இதுல இருந்து என்ன தெரியுது?

Sunday, November 14, 2010

வாலி-1000 விழாவில் அழைக்கப்படாத சூப்பர் ஸ்டார்!

கவிஞர் வாலிக்கும் ரஜினிக்கும் ஏதோ மனக்கசப்பு போல் தெரிகிறது. வாலி 1000 விழாவுக்கு ரஜினி அழைக்கப்படவில்லை(யா?). நீங்க அழைச்சால்தான் நான் வரனுமா னு ரஜினி போய் கலந்து இருக்கிறார்! வாசியுங்கள்!
-----------------
It was a moment that suddenly sprang up from nowhere. Not sure whether I can call it as a moment for me because it happened for thousands.

Today evening at Narada gana Sabha, Vaalee's 80th birthday celebrations took place and along with it his 1000 film songs that has been complied as a book was released. Ulaganayagan released the book which was received by Shankar.

So many celebrities that comprised of a wide spectrum was there in the stage. Function that had a dance programme comprising of Vaalee's songs was held in the begining after which programme started at 7 pm.

Around 8.30 pm, SPB was speaking rather singing some lines from Vaalee's songs. Suddenly the entrance at the left side of the auditorium swung open and in the dim light we could see somebody walking and who started climbing the stairs. It was Vairamuthu in his usual white and white attire. Claps were there and suddenly it became a roar when a man in a white shirt and black pant was seen walking behind Vairamuthu and there he was Super Star!

I am seeing him in person after 31 years!

A complete surprise to everyone as he was not there in the invitees list. He stayed there till the end [10 pm] and also gave a short but sweet speech.

"இந்த மாதிரி ஒரு விழா நடக்குது நாம போலாமான்னு வைரமுத்து கேட்டார். நான் வரலே-னு சொன்னேன். என் டாட்டர் மாரேஜிக்கு நேர்ல போய் பத்திரிக்கை வைச்சு கூப்பிட்டும் வாலி அய்யா வரல. வராதது பத்தி ஒண்ணும் இல்ல. ஒரு போன் பண்ணி இந்த காரணத்தினாலே வரலேன்னு சொல்லியிருந்தா பைன். ஆனா வரலே. பட் அதுக்காக நாம போகாம இருக்க கூடாதுன்னு நினைச்சு கிளம்பி வந்துட்டேன்.

இங்கே பெரிய பெரிய ஆட்களெல்லாம் இருக்காங்க. எனக்காக மூன்று முடிச்சுல முதல் முதலா எனக்கு "மன வினைகள் யாருடனோ" என்று குரல் கொடுத்த எம்.எஸ்.வி இருக்கிறார், அப்ப மட்டுமில்ல நினைத்தாலே இனிக்கும் படத்திலே எனக்கு வேற யார் வாய்சும் சூட் ஆகலேன்னு சொல்லி சம்போ சிவ சம்போ-வுக்கு குரல் கொடுத்தவரும் அவர்தான். சௌந்தரராஜன் அய்யா இருக்காங்க. நான் பைரவி ஷூட்டிங் ஸ்பாட் போறேன். அங்க அய்யா பாடின நண்டூருது நரியூருது பாட்டு கேட்டிட்டு இருக்கு. நான் சிவாஜி எம்ஜிஆர் பாட்டுன்னு நினைச்சேன். அப்போதான் நான்தான் அந்த பாட்டுக்கு நடிக்க போறேன்னு தெரிஞ்சுது. சரோஜா தேவி அம்மா இருக்காங்க. பாலு இருக்கார்.

வாலி பாட்டை நான் சொல்ல என்ன இருக்கு? ஷங்கர் வந்திருக்கிறார். அவரை திருப்தி படுத்துவது ரொம்ப கஷ்டம். ஆனா அவரே அந்த டென்ஷன்-லிருந்து ரிலாக்ஸ் ஆக வாலி சாரை வரச் சொல்லி பேசுவார்.

எத்தனை எத்தனை பாட்டு? பாலு பாடிக் காட்டினாரே!எம்ஜிஆருக்கு நான் ஆணையிட்டால் எனக்கு அம்மா என்றைழைக்காத பாட்டு! அது ஒன்னு போதாதா?

அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து நிறைய நிறைய பாடல் எழுதனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன். நன்றி வணக்கம்."

Regards

Friends, the above mentioned was his gist of speech. If I remember anything else, will come back.
---------------------------
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் நேரிடையா கண்டது!

Friday, November 12, 2010

உங்க கருத்துச்சுதந்திரம் பறிபோகும் அவல நிலையில்!

என்னைப் பொருத்தவரையில் நம் கருத்துச் சுதந்திரம்தான் பதிவுலகில் நமக்கு முதன்மையானது, முக்கியமானது. மத்ததெல்லாம் ரெண்டாவதுதான்! பதிவுலகில் நீங்க "பெரிய ஆளோ" இல்லை "சின்ன ஆளோ" ஒரு பதிவை வாசிச்சுட்டுட்டு உங்க கருத்தைச் சொல்ல உங்களுக்கு நிச்சயம் உரிமை வேண்டும்! அந்த உரிமை பறிபோகும் நிலை வந்தால் பதிவுலகில் இருப்பதே சுத்தமான வேஸ்ட்!

பதிவுலகில் ஒருவர் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத, சுத்தமாக முரணான ஒரு கருத்துள்ள பதிவை எழுதி வெளியிடுகிறார்னு வச்சுக்குவோம். பதிவுலகம் மிகப் பெரியது, நீங்க அதில் ஒரு துரும்புதான். அதனால அவரைப்போலவே சிந்தனைகள் உள்ளவர்கள் பலர் அந்தப்பதிவை ஆஹா ஓஹோனு சொல்லத்தான் போறாங்க. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததால் பொதுவா இதுபோல் ஒரு சூழலில் நீங்க இதை கண்டுக்காமப் போயிடலாம். ஆனால் ஒரு சில நேரம் அதை கண்டுக்காமப் போகமுடியாது! அந்தக் கருத்துடன் மாறுபட்ட உங்க கருத்தை சொல்லியே ஆகனும்னு சூழ்நிலை எழுகிறது.

எங்கே சொல்வது? அந்தக் கருத்தை சொன்ன தளத்திலா? ஆமா, வேறெங்கே சொல்வது? அதைத்தான் பின்னூட்டங்களில் வாசகர்களும் சக பதிவர்களும் தெரிவிக்க முயல்றோம். பின்னூட்டத்தில் ஒருவர் நல்லா எழுதியிருந்தால் பாராட்டுறோம். சுத்தமா அதில் சொன்ன கருத்து ஏற்றுக்கொள்ள முடியலைனா திட்டுறோம். இரண்டுக்குமே உங்க பொன்னான நேரம் செலவிடப்படுகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது! ஆனால் உங்க கருத்தை அவ்வளவு ஈஸியா இன்னொரு பதிவர் தளத்தில் சொல்லிட முடியாது!

* சாரு நிவேதிதா, "நான் கடவுளை க் கண்டேன்" னு நித்யானந்தாவைப் பற்றி ஏதோ கேணத்தனமா எழுதுறார்!

* நித்யானந்தாவையும், தந்தை பெரியாரையும் சம்மந்தப்படுத்தி ஒரு சாதிவெறிபிடித்த வம்பர் இஷ்டத்துக்கு லாஜிக் பேசி உளறுகிறார்!

இந்த மாதிரி சூழல்களில் நீங்க உங்க கருத்தை சொல்லியே ஆகனும்! சாரு, தன் தளத்தில் ஜால்ரா இ-மெயில் மட்டும்தான் வெளியிடுவார்! அவர் சொல்றதை கேட்டுக்கிட்டு ஆமா ஆமானு ஜாலரா அடிப்பதுபோல் பின்னூட்டம் இல்லையென்றால் உங்க கருத்தை சொல்ல முடியாதே!

அதேபோல் பெரியாரை சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் இழுக்கும் இந்த வம்பரிடம் போய் என் மாற்றுக் கருத்தை வெளியிடுங்கனு கெஞ்சனுமா? தீண்டாமை சரினு சொல்றவனிடமெல்லாம் நியாயம் பேச முடியுமா? சாதி வெறி இன்னும் அடங்காமல் இருக்கும் ஒருவனிடம்? சாண்ஸே இல்லை!

ஒரு சில இடங்களில் பாராட்டும் பின்னூட்டம்தான் பொதுவா மாடெரேஷன் கடந்து வெளிவரும். பதிவர் கருத்துடன் உங்க கருத்து சுத்தமா ஒத்துப் போகலைனா (யார் சொல்றது சரி, தவறென்பது வேறு விசயம), உங்க பின்னூட்டம் பொதுவா வெளியே வராது. மேலும் உங்க பின்னூட்டம் பதிவருடைய "அகந்தை"யை தொடுவதுபோல இருந்தாலும் பின்னூட்டம் வெளியே வராது. ஒரு சில நேரம் உங்க பின்னூட்டம் உணர்ச்சி பொங்கி வேகத்தில் எழுதி அநாகரிகமாக இருந்தாலும் வெளியே வராது. உங்க பின்னூட்டத்தை போட்டுட்டு "ஐயா" அப்ரூவ் பண்ணூறாரானு நீங்க வெயிட் பண்ணிட்டு நிக்கனும்!

நாலும் நாலும் பத்துனு சொல்லுவான். நாலு அரைவேக்காடுகள் ஆமா ஆமா னு சொல்லும்! அதை நான் ஏத்துக்கனுமா? என் மாற்றுக்கருத்தை நான் சத்தமாகச் சொல்லனும்!

எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா?

ஒரு பதிவர், அவருடைய தளத்தில் அவர் தன்னை அவமானப்படுத்த அலல்து இறக்க இடம் கொடுக்கனும்னு என்ன இருக்கு? அபப்டியெல்லாம் தியாகம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஒரு பதிவை வாசித்துவிட்டு, அதில் உள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் (உங்க பின்னூட்டம் மட்டுறுத்தப்படுவதால்), நீங்க அதை சொல்லியே ஆகனும்னு நிலை வருவதுண்டு. அதுபோல் நிலையில் மற்றவர்கள் என்ன செய்வாங்கனு தெரியலை, நான் என் பின்னூட்டத்தில் சொல்ல விரும்புவதை ஒரு பதிவாக எழுதுவதுண்டு!

ஏன் இதுக்கெல்லாம் ஒரு பதிவா? னு பலர் இதை கேலி பண்ணலாம்!

என் பார்வையில் உங்க கருத்தை சொல்ல முடியாத, உங்க கருத்து சுதந்திரம் பறிபோகிற ஒரு அவல நிலையை நீங்க ஏன் ஏற்றுக்கனும்? உங்களுடைய பேச்சுரிமையை எவனோ ஒருவன் பறிப்பதை நீங்க ஏத்துக்க கூடவே கூடாது!

இதற்குத்தான் உங்க தளம் இருக்கு, இல்லையா? உங்க கருத்தை எவனையும் கெஞ்சாமல், எவனோட அப்ரூவலும் இல்லாமல் சத்தமாக அடித்துச் சொல்ல!

Wednesday, November 10, 2010

கமலஹாசனும் படுக்கை அறையும்!

கமலஹாசன் சொன்னது: ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகளைப் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விசயம். அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது, அர்த்தமற்றது.

நிச்சயம் இவர் ஒரு பகுத்தறிவுவாதி என்றால் இங்கே ஆத்திக உணர்வுகள் = நாத்திக கொள்கைகள், உணர்வுகள். அதாவது, கமல், "நாத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகளைப் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விசயம். அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது, அர்த்தமற்றது." என்பதையும்தான் இங்கே சேர்த்து சொல்கிறார்.

அப்போ நாத்திக உணர்வும் படுக்கை அறை உணர்வுகள்தான்னு இவர் நினைத்தால். தந்தை பெரியார் ஏன் அவர் படுக்கை அறை உணர்வுகளை உலகுக்கு சொன்னார்?

* கடவுளை கற்பித்தவன் முட்டாள்!

* பரப்புகிறவன் அயோக்கியன்!

* வணங்குகிறவன் காட்டுமிராண்டி!

தந்தை பெரியார் அவர் எண்ணங்களை, அவர் நம்பிக்கையை சத்தமாக வெளியே சொல்ல வில்லையா?

கமலஹாசன், அடுத்த முறை என்ன எழவைனாலும் "படுக்கை அறை" மேட்டர்னு பேசுவதுக்கு முன்னால் கொஞ்சம் இதையெல்லாம் யோசிக்கனும். எதுக்கெடுத்தாலும் இது படுக்கை அறை சமாச்சாரம் போலனு ஏதாவது சொல்லக்கூடாது!

ஆத்திக கொள்கைகள் ஒருவருடைய தனிப்பட்ட மேட்டர்னா, நாத்திக கொள்கைகளும்தான் ஒருவர் தனிப்பட்ட மேட்டர் என்பது இவருக்கு புரிந்து இருந்தால், இவர் பல பெரியவர்களை தான் அறியாமலே அவமானப் படுத்தியுள்ளார்னுதான் சொல்லனும்.

கமலு சொல்லிப்புட்டாருனு, பண்டாரங்கள்ல இருந்து ஆண்மீகவாதினு சொல்லிக்கிட்டு திரியிறவர் பலர் இதை ரசிக்கலாம். ஆனால், உண்மையான பகுத்தறிவு வாதி, ஆத்திகன் உணர்வுகளையும், நாத்திகன் உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்தவன். அவர்கள் உணர்வுகளை புரிந்துகொண்டவந்தான்!

மேலும் நாத்திகர்களும் கடவுளும்னு (இங்கே க்ளிக் செய்யவும்) நானும் ஏதோ பதிவுபோட்டு இருக்கேன். இது என் படுக்கை அறை மேட்டர்னு நான் நினைக்கவில்லை! நினைத்து இருந்தால் அதை எப்படி உலகுக்கு சொல்லியிருப்பேன்?

Monday, November 8, 2010

சாருவின் எந்திரன் விமர்சனம் - செம காமடி!


சாருவுடைய எந்திரன் விமர்சனம் செம காமெடியா இருக்குப்பா! இவருடைய விமர்சனத்தில் சொல்ற மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒண்ணு என்னனா 61 வயது ரஜினி, 37 வய்தான ஐஸ்வர்யா ராயோட டூயட் பாடுவது, காதலிப்பது. அவங்க சினிமாவில் டூயட் பாடுவதைப் பார்த்து சாருவுக்கு வயிரெல்லாம் எரியுது. சினிமாவில், 61 வயது ஆண், 37 வயது பெண்ணை காதலிப்பது ஆபாசம், அருவருப்புனு ஏதேதோ உளறுகிறார், சாரு.

சரி, வயிரெரிந்தால் அதை இப்படியா வெளியே காட்டுறது மனுஷன்?

இதில், ஐஸ்வர்யா ராய் பச்சன், மற்றும் அவர் கணவர் அபிஷேக் பச்சன் எல்லாம் நடிப்பு என்பது ஒரு தொழில் என்பதை அறிந்து பேசாமல் இருக்காங்க! ஆனா, சாரு மட்டும் ஏன் தாந்தான் அபிஷேக் பச்சன் என்பதுபோல இப்படி குதிக்கிறார்?

இதே சாரு நம்ம கலாச்சாரத்தில் ப்ரிமாரிட்டல் செக்ஸ்லாம் தப்பு இல்லைனு ஒரு பக்கம் ஏதோ சொல்லிக்கிட்டு திரிகிறார். இன்னொரு பக்கம் சினிமாவில், ஆமா சினிமாவில், வயது வித்தியாசம் அதிகம் உள்ள ரெண்டு அடல்ட்ஸ் காதல் செய்வதை தப்புனு சொல்றார். ஆபாசம், மற்றும் அவவருப்புனு பொய் பொய்யா சொல்லிக்கிட்டு திரிகிறார். இவர் முன்னுக்குப் பின் முரணாக இப்படிப் பேசுறது இவருக்கே மட்டமாத் தெரியலையா?

ஹாலிவுட் சினிமா, உலக சினிமானு உளறிக்கொண்டு திரியும் இவருக்கு, ஹாலிவுட் லெஜெண்ட் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நிஜ வாழ்க்கை பத்திகூடத் தெரியாதா?

After initially meeting in an interview in 1993,[278] Eastwood married anchorwoman Dina Ruiz Shadow Creek Golf Course.[279] She is 35 years his junior. The couple's daughter, Morgan Eastwood, was born on December 12, 1996. Ruiz commented, "The fact that I am only the second woman he has married really touches me."[280] Eastwood says that she has brought his family close together, and Ruiz maintains a friendly relationship with Eastwood's other children and their mothers.[264] He professes to be a much better father now at his age than when he was younger and worked constantly.[281]



இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு மகளும் உண்டு. நிஜ வாழ்க்கையில் இதுபோல் உலகில் நடக்கும்போது, சினிமாவில் ஒரு பேராசிரியர் அவருடைய மாணவியுடன் இண்வால்வ் ஆவது அவரை மணந்து கொளவ்தெல்லாம் தெரியாமல் ஏதோ படிப்பறிவே இல்லாத உலகமே தெரியாத ஒரு ஆள் போல இதையெல்லாம் பெருசா பேசிக்கிட்டு திரிகிறார்.

சாருவுக்கு, நெறையா பெரிய படிப்பெல்லாம் படிக்க ரொம்ப வாய்ப்பு இல்லாமல் போனதால்தானோ என்னவோ விஞ்ஞான உலகம் மற்றும் அக்கேடமிக் லைஃப் பத்தி எதுவும் தெரியவில்லை. வயதான பேராசிரியர்கள் , அவர்கள் மாணவிகளுடன் (அவர்கள் விருப்பத்துடன்) இண்வால்வ ஆவது பத்தி இவரு படிச்சு தெரிஞ்சுக்கனும். சில நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்கள் பத்தியும் இவர் கொஞ்சம் படிச்சா இவருக்கு அறிவு வளரும்.

உலக சினிமாபத்தி வாய்கிழிய பேசும் இவர் நிஜ உலகம் அறியாத பச்சைக் குழந்தை போல், இரண்டு அடல்ட்ஸ் காதல் கொளவதை பெருசா எழுதி விமர்சனம் என்கிற பேரில் தன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டு திரிகிறார்!

எந்திரன் படத்தில் காமெடி நல்லா வந்திருக்கோ இல்லையோ, ஆனால் சாருவின் எந்திரன் விமர்சனம் செம காமெடியா வந்திருக்கு! மேலே சொன்னது ஒரு சின்ன உதாரணம்.

Friday, November 5, 2010

மறந்து வாழ வேண்டும்!

அந்தக்காலத்திலேயே அமெரிக்காவுக்கு வந்தவர்களில் பல கிரிமினல்களும், கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களும், நாட்ஸிகளுக்குப் பயந்து எப்படியோ உயிரைக் காப்பாத்த வந்தவர்களும்தான் அதிகம். எப்படியோ வந்து செட்டிலாகி, அமெரிக்க இந்தியர்களை அனுப்பிட்டு இன்னைக்கு இந்த சூப்பர் பவரில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

பழசை மறந்து வாழுகிற அமெரிக்கர்கள்தான் அதிகம். தன் மூதாதையார் அடிமையா வாழ்ந்ததை, சித்ரவதை செய்யப்பட்டதை, எந்த ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ரசிக்க முடியும்? இன்னைக்கும் ஒரு சில ஆஃப்ரிக்க நாட்டிலிருந்து வருகிறவர்கள் அந்த நாடுகளில் உள்ள அசிங்கமான அரசியல் சாக்கடையிலிருந்து எப்படியோ உயிரைக் காப்பாற்றி இங்கே வந்து வாழுறாங்க! இந்தியாவில் உள்ள ஜனநாயகம் எல்லாம் அவங்க நாட்டிலே கெடையாது!

செலிப்ரிடீஸ் (பிரபலங்கள்) பலர் சிறுவயதில் செக்ஸுவல் அப்யூஸ் செய்யப்பட்டவங்கதான், பலவிதங்களில் பாதிக்கப் பட்டவங்கதான். இவர்கள் யாருமே சிறுவயது வாழ்க்கையை நெனச்சுக்கூடப் பார்க்க விரும்புவதில்லை.

இது போக காதல் தோல்வி, நடத்தை சரியில்லாத மனைவி அல்லது கணவன் போன்ற அனுபவம் பெற்ற துரதிஷ்டசாலிகள் கடந்தகாலத்தையே நினைத்து நினைத்து "ஒருதலை ராகம்"பாடிப்பாடி வாழ்நாள் பூராம் சாகாமல், பழசை எல்லாம் மறந்து வாழனும் என்பதுதான் பொதுவாக அமெரிக்கன் ஆட்டிடூட்னு சொல்லலாம். அதுதான் அவர்கள் வெற்றிக்கும் காரணம்னு கூட சொல்லலாம்.

shawshank's redumption படத்தில் நம்ம ஹீரோ டிம் ராபின்ஸ் (ஆண்டி) தப்பிச்சுப் போயி பஸிஃபிக் ல கடற்கரையில் தன் கடைசிகாலத்தில் வாழ ஒரு ப்ளான் (பகல் கனவுதான்) வச்சிருப்பார்.

Andy Dufresne: (டிம் ராபின்ஸ்): You know what the Mexicans say about the Pacific?

Red
:(மார்கன் ஃப்ரீமேன்): No.

Andy Dufresne
: They say it has no memory. That's where I want to live the rest of my life. A warm place with no memory.

ஏன் இப்படி சொல்றார்னா அவர் மனைவி, இவர் சரியில்லைனு இன்னொருவனுடன் ஓடிப்போயி உறவு வைத்துக்கொள்ளுவாள். அவளையும், அவளோட பாய்ஃப்ரெண்டையும் யாரோ கொலை செய்ய, ஆனா இவர்தான் கொலை செய்ததா ஃப்ரேம் பண்ணி இவரை ஜெயில்ல போட்டிருவாங்க. இண்னொசண்ட் ஆன இவர் ஜெயிலில் எல்லாவிதமான கொடுமைக்கும் ஆளாகிக்கொண்டு இருக்குபோது எப்படியாவது ஒரு நாள் அங்கிருந்து தப்பிச்சு வெளியே வந்து "பழ்சை எல்லாம்" மறந்து வாழ ஆசைப்படுவார். அதான் இப்படி சொல்றார். அதேபோல் கடைசியில் ஜெயிலில் இருந்து தப்பிச்சுப் போய் பழசை மறந்து பசிஃபிக் ல வாழுவார். அவருக்கு மறதி என்பது ஒரு நல்ல மறந்து. அசிங்கமான அல்லது வளமையில்லாத பழைய வாழ்க்கையை நினைத்தோ கவலைப்பட அவர் இஷ்டபடமாட்டார். சரி, அவர் வாழட்டும்!

நட்பு என்பது உலகத்திலேயே சிறந்த ஒண்ணு. உயிர் காப்பான் தோழன், பழசை மறப்பது தப்பு அது இதுனு நம்ம திருக்குறள்ல இருந்து இன்னைக்கு வரை சொல்லிக்கிட்டுதான் இருக்கோம். நான் இல்லைனு சொல்ல வரவில்லை!

உண்மையில் பார்த்தால் சிறுவயதில் நம் அறியாப் பருவத்தில் இருந்த நட்புதான் ஓரளவுக்கு தூய்மையானதுனு சொல்லலாம். தன்னலமில்லாமல் பழகிய அந்தக்காலத்து பழைய நண்பர்கள் எங்கோ வாழ்ந்துகொண்டு இருக்கத்தான் செய்றாங்க. ஆனால் அவங்க எந்தவகையில் அவர்கள் நம் வாழ்வில் வர்றாங்க? னு பார்த்தால்..நெறையப் பேருக்கு அவர்கள் இன்றைய வாழ்வில் வருவதே இல்லை! அந்த நண்பர்களும் அந்த அழியா நட்பும் நம் மனதில் ஒரு ஓரத்தில் உயிருடன் இருந்தாலும் ப்ராக்டிகலா அந்த நட்போ, நண்பர்களோ நமக்கு இன்றைய வாழ்வில் வருவதோ, உதவுவதோ இல்லை, உதவ முடியாத நிலையாகிவிடுகிறது!

வாழக்கை சக்கரத்தில் வெகுதூரம் இருவரும் வேறு வேறு திசையில் போயிருப்போம். பொதுவாக பழைய நண்பரை, எப்போதாவது 5 வருடத்திற்கு ஒரு முறை, பத்து வருடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொள்ளும் போது, ஒவ்வொருடைய வாழக்கையிலும், அவருடைய வாழ்க்கையிலும் நெறையவே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இன்றைய நிலையில் உங்களால் பழைய நண்பருக்கோ, அவரால் உங்களுக்கோ பெருசா அறிவுரைகள் தரமுடியாது, உங்க பிரச்சினைக்கு இன்னைக்கு தேவையான ஆறுதல் அவரால் சொல்ல முடியாது.

அந்தப் பழைய நண்பரை முன்பிறவியில் சந்தித்ததுபோலவும், அந்த நட்பு ஒரு முன்பிறவியில் நடந்தது போலத்தான் ஆயிடுவது இயல்பு. அந்தக்காலத்தில் எப்போதும் உங்களை சிரிக்க வைக்கும், அதே நண்பர்கள்கூட இப்போ உள்ள சூழ்நிலையில் சோகமாக உங்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யமுடியாத நிலைமைக்கு காலவெள்ளத்தில் தள்ளப்பட்டு ரொம்பவே மாறிவிடுறாங்க எனப்துதான் நிதர்சனம்!

நான் பார்த்தவரைக்கும், நாடுவிட்டு நாடு போறவங்க, ஏன் ஊர் விட்டு ஊர் மாறுறவங்ககூட, புதுப் புது நண்பர்களுடந்தான் பழகி வாழ்க்கையை தொடருறாங்க!

பதிவுலகிலேயேகூட நீங்க கொஞ்சம் நட்பைப் பத்திப் பார்க்கலாம். நட்புக்கு இலக்கணமா இருந்தவங்க எல்லாம் ஒரு சின்ன மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிக னால ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பதிவைப்போட்டு அவமானப்படுத்திக் கொள்வதை. நெறையப்பேர் வாழக்கையில் நட்பு ரொம்ப தொலைக்கெல்லாம் போவதுபோல தெரியலை.

நட்பின் சிகரங்கள் எல்லாம் என்னோட சண்டைக்கு வரலாம். ஆனால் இதுதான் நான் கண்டது! இது கற்பனை அல்ல! நெஜம்!

Thursday, November 4, 2010

ட்ரெஸோடதானே ஆடுவ? கடலை கார்னர்-63 (18+ ஒன்லி)

கடலை கார்னர் -62 இங்கே!

"ஸோ, ஐ வின்! ரெட் எடுத்தது நீங்கனால, ரெண்டு பாயிண்ட்தான் எனக்கு. டஸ் நாட் மேட்டர். நான் தான் வின்னர்!"

"பிருந்த்! what you did is cheating.."

"ஐ டோண்ட் தின்க் ஸோ"

"In that case, the credit goes to, your sexy butt!"

"ஹா ஹா ஹா ..அதெல்லாம் இல்லை!"

"அதுதான் உண்மை!"

" நான் வின் பண்ணியதால இன்னைக்கு நான் சொல்றபடியெல்லாம் நீங்க கேக்கனும்"

"அன்னைக்கு மாதிரி, உன் ஸ்லேவா இருக்கனுமா?"

"இருக்கீங்களா?"

"ஏய்! தட் வாஸ் ஜஸ்ட் எ வார்ம் அப் கேம். உண்மையிலேயே பெட் கட்டிட்டு வெளையாடனும்! வர்றியா?"

"சரி, தோத்தால் நீங்க என் ஸ்லேவ்! இன்னைக்கு நான் சொல்றத எல்லாம் கேக்கனும்"

"ஓ கே!"

"இடையிலே டாண்ஸ் அல்லவ்ட் தானே?"

"சரி, அடுத்து என்ன மாதிரி டாண்ஸ் ஆடப்போற?"

"தெரியலை! இட் டிப்பெண்ட்ஸ்"

"ட்ரெஸோடதானே ஆடுவ?"

"ஹா ஹா ஹா"

"என்ன சிரிப்பு? நீ என்னவேணா பண்ணுவடி!"

" என்னவோ பிடிக்காத மாதிரித்தான்.."

"நீ சிரிச்சால்கூடத்தான் ரொம்ப பிடிக்குது"

"ஐய்யோ.. நீங்க ஏன் மனச இப்படி அலைய விடுறீங்க, டார்லிங்?"

"சரி, லாப் டாண்ஸ் எல்லாம் அல்லவ்ட் இல்லை!"

"சரி. அதெல்லாம் உங்களுக்குத் தேவை இல்லை. நீங்க ரொம்ப வீக் கண்ணன்!"

"சரி வெளையாடலாம்! இந்த முறை நீ ஸ்டார்ட் பண்ணு!"

"ஓ கே!"

**********************

"உண்மைலேயே நீ நல்லா ஆடுறடா! யு ஹாவ் வெர்ரி குட் கண்ட்ரோல்!"

"சரி, ஐஸ் வைக்காமல் ஆடுங்க, கண்ணன்!"

"ஐஸ் வச்சாலும் உன் கண்ட்ரோல் போகமாட்டேங்கிது. அதெப்படி பிருந்த்?"

"இந்த முறையும் நாந்தான் வின் பண்ணுவேன் போல இருக்கு!"

"பார்க்கலாம். கொஞ்சம் இரு!"

"என் ஸ்ட்ரைக்கரை தாங்க!'

"இருடி. "

"என்னை இப்போ என்ன ப்ண்ணப் போறீங்க?"

"நீ இப்போ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா, பிருந்த்?"

"தெரியும் தெரியும்!"

"என்ன தெரியும்? ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யு நவ்! அது தெரியுமா?"

"எதுக்கு? என்னை டிஸ்ட்ராக்ட் பண்ண வைக்கவா?"

"ஆமா, அதுக்கும்தான்"

"அது சரி.. கிஸ்ப் பண்ண இங்கே எங்கே கீழே குனியுறீங்க?"

"ஸ்ஸ்..பேசாமல் இரு!"

"அச்சச்சோ.. ரொம்ப ரொம்ப மோசம் நீங்க!"

"ஐ ஆம் கோயிங் டு கிஸ் ஹியர்!"

"நெஜம்மாவா?"

"யெஸ்!"

"ஸ்ஸ் "

" "

" "

"இதெல்லாம் ரொம்ப ரொம்ப மோசம் தெரியுமா, டார்லிங்?"

"யார் சொன்னா? "

" "

"லைக்ட் இட்?"

"ஓ மை காட்! யு ஆர் நாட்டி, டார்லிங்!"

****

"சரி இந்தா ஸ்ட்ரைக்கர்! இப்போ வெளையாடு!"

"என்னால இனிமேல் வெளையாட முடியாது!"

"ஏன்? என்னாச்சு, பிருந்த்?"

"என்ன ஆச்சா? ஒழுங்கா பெட் ரூம்க்கு வாடா பொறுக்கி!"

"ஏய்! எதுக்கு?"

"அதுக்குத்தான்! நான் வெறியோட இருக்கேன்..ஒழுங்கா வந்து என்னை சாந்தப் படுத்து"

"கேரம் அவ்ளோதானா?"

"நான் இருக்கும்போது உங்களுக்கெதுக்கு கேரம் எல்லாம்?"

"அது சரி!"

"ரொம்ப நேரம் என்னை காக்க வைக்காதே பொறுக்கி! சீக்கிரம் வந்து சேரு!"

-தொடரும்

Wednesday, November 3, 2010

கமலஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை

இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு இப்போது கல்யாணத்தில் (எதுக்கு இன்னொரு விவாகரத்துனு) நம்பிக்கை இல்லாமல் இருக்கார் கமல். சும்மா அவசரப்படாமல், கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், வாழக்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமையுது. உறவுகள் ஒரு சிலருக்கு நல்லா அமையலாம். ஒரு சிலருக்கு பெரிய உபத்திரவமாக அமையலாம். அதனால யாரையும் சும்மா குற்றம் சொல்லக்கூடாதுனு நமக்குப் புரியும்.

ஒரு சில கணவன் - மனைவி கள் ஒருவரை ஒருவர் பிடிக்கலைனாலும் "காதல்" இல்லாமலே, "அன்பு" இல்லாமலே கணவன் - மனைவியா காலங்காலமாக கட்டி அழுது முடிக்கிறார்கள். ஒரு சிலர், அப்படி வாழ்வதை அதை ஸ்ட்ரெஸ் ஃபுல்லா மேலும் அர்த்தமற்ற வாழ்வாக நினைத்து, விவகாரம் முற்றியவுடன், சரிப் படுத்தமுடியாத நில வந்தவுடன் சட்டப்படி என்ன செய்யமுடியுமோ அதைச் செய்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். இதில் எது சரி, எது தப்புனு சொல்வது கடினம்.

கமலும், பிடிக்காத ஒருவரை காலங்காலமாக கட்டி அழ இஷ்டமில்லாமல், அவர் ரிலேஷன்ஷிப் ல சமாளிக்க முடியாத பிரச்சினை வரும்போது நாகரிகமாக, சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு ஒதுங்கியுள்ளார். பிடிக்காமல் போய்விட்ட பிறகு எதுக்கு ஒருவரை ஒருவர் போலியாக கட்டியழனும் அவர்?

ஆனால் நம்ம அவரை விட்டுவிட்டாலும், ஒவ்வொரு நேர்முகப் போட்டியிலும், அவர் தனிப் பட்ட வாழ்க்கை சம்மந்தமான கேள்வி, நாகரிகமாக இல்லைனா அநாகரிகமாகவோ எழத்தான் செய்யுது. இப்படி மீடியா அடிக்கடி அவரிடம் கேட்டு அவரைக் கஷ்டப்படுத்தும் போது கமல் அந்தக் கேள்விகளுக்கு சரியாக சொல்லி சமாளிக்கிறாரா என்னனு தெரியலை. இல்லை, எனக்கு அவர் சரியாக பதில் சொல்லுவதாக தோனலை.. He can do better!னு தான் சொல்லுவேன்.

* சமீபத்தில் ஒரு கேரளா சேனலில், இது சம்மந்தமாக கேள்வி வரும்போது, கமல் சொன்னார், "தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள்" னு எதையோ இதிகாச கல்யாணம் பத்தி சொன்னார். அப்புறம் ஏதோ அதற்கு பதில் சொன்னார். எனக்கு அவர் பதில் திருப்திகரமாக இல்லை. தசரதனை எல்லாம் இழுக்க வேண்டிய அவசியமே இல்லை!

சமீபத்தில் குமுதம் நேர்முகக்கானலில் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் சொன்ன பதிலும், கீழே இருக்கு

* உங்களுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்றத் தாழ்வுகள். ஆனால் எப்படி தன்னம்பிக்கை குறையாமல் நிற்கிறீர்கள்?

“ஒவ்வொரு வளர்ச்சிக்கும், ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தேவை இருக்கிறது. தேவை வரும்போது அழுகை வரும். தேவை பூர்த்தியாகிவிட்டால் அழுகை வராது. எல்லோர் வாழ்க்கையிலும் மேடு பள்ளம் இருக்கின்றது. எனக்கும் இருக்காதா என்ன? என்னுடைய சொந்த வாழ்க்கையின் சோகங்களை வெளியே சொல்லத் தேவையில்லை. என் வீட்டு டாய்லெட், பாத்ரூம் வெளியே தெரிய வேண்டாம். அதற்கு கதவு இருக்கின்றது. அந்தப் பக்கமாக பார்க்க முயற்சிக்காதீர்கள். கதவு மூடி இருந்தால் சாவி துவாரத்தின் வழியே பார்க்க்க் கூடாது! மீறி பார்த்தால் உங்களுக்குத்தான் அவமானம். தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும் போல எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே? அதை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”


இந்த பதிலும் எனக்கு திருப்திகரமாக இல்லை! என் பெட் ரூமை பார்க்காதீங்க, என் பாத் ரூமை துவாரத்து வழியாப் பார்க்காதீங்கனு இவர் சொல்லனுமா?

எனக்கென்னவோ கமல், இதுபோல வரும் கேள்விக்கு நல்லா பதில் ப்ரிப்பேர் செய்து, இதைவிட, தன் துரதிஷ்ட வசத்தை, மேலும், உறவுங்கிறது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமையும், நேற்றுபோல இன்னைக்கு இருப்பதில்லை, மாறிக்கொண்டு போகும் ஒண்ணு, என்கிற உண்மையை இன்னொருமுறை சொல்லி, தன்னால் கட்டுப் படுத்தமுடியாத/சமாளிக்க முடியாத ஒரு நிலை வரும்போது, தான் எடுத்த முடிவு எனக்கு மட்டுமல்ல என் பழைய பார்ட்னருக்கும் நல்ல முடிவுனு நம்புவதாக தெளிவாக சொல்லலாம்னு தோனுது.

Tuesday, November 2, 2010

வா குவாட்டர் கட்டிங்னா என்ன எழவுத் தமிழ்ப் பெயர்?

நடிகர் சிவா அவர்கள் "தமிழ்ப் படம்" எடுத்து தமிழ்ப்படத்தில் உள்ள குறைகளை எல்லாம் கேலி செஞ்சு ஒரு எம் ஆர் ராதா ரேஞ்சுக்கு சாதிச்சதென்னவோ உண்மைதான். இவரோட அடுத்த படம் தீவாளிக்கு வருதாம்! படம் பேரு என்ன தெரியுமா? பேரு... வா க்வாட்டர் கட்டிங்! What kind of **cking title is this for a Tamil movie? (பேரைக்கேட்டதும், இதுதான் என் மனசுல தோன்றிய வாக்கியம்)

இப்போலாம் நம்ம முன்னேறிட்டோம் என்பது தெரிவது எதுக்கெடுத்தாலும் "தண்ணி அடிக்கிற" மேட்டரை சாதாரணமாக தமிழ்ப் படங்களில் காட்டுவதுதான். சரி, அதாவது பரவாயில்லை, இதென்னங்க பேரு? இந்தப் பட டைட்டிலை கேட்டாலே எரிச்சல் வருது. நான் மட்டும்தான் இப்படி உணருகிறேனா?

இதுபோல் வெவகாரமான பெயர் வைக்கும்போதும் அதுக்கு விதிவிலக்கு எல்லாம் கொடுத்தால் ரொம்ப கேவலமா இருக்கு, கலைஞரே! ஏதாவது செய்ங்க! இல்லைனா வழக்கம்போல் செயா டி வி மட்டுமல்ல ஊர் சிரிக்கும், உலகம் சிரிக்கும் உங்க "தமிழ்ப் படத் தலைப்பு" வரிவிலக்கு சலுகைய நெனச்சு!

என்ன இந்தப்படத்துக்கு வரி விலக்கு இல்லையா? அப்போ மன்னிச்சுக்கோங்க!

-----

முதல்வருடைய வருத்தம் இந்தப் பதிவில் இருக்கு! (பிறகு இணைத்தது)